Skip to main content

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான கட்சி நிர்வாகியின் கையில் அருவா! - விருதுநகர் மாவட்ட வில்லங்க காமெடி!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

virudhunagar rajendrabalai's opposite party member

 

புதிய நிர்வாகிகள் என 800 பேர் வரை நியமிக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில்,  சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனின் ஆதரவாளர்களில் ஒருவருக்குக்கூட இடமில்லாமல் செய்துவிட்டார், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரான கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதனால், எம்.எல்.ஏ. தரப்பு டென்ஷனாக இருக்கிறது என்று  பேசப்படும் நிலையில், ராஜவர்மனின் ஆதரவாளரான, நரிக்குடி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நீளமான அரிவாள் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படங்களை, பெயர் சொல்ல விரும்பாத ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர்,   நமக்கு அனுப்பிவைத்தார். 


    
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என ராஜவர்மன் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன் அரிவாளோடு உள்ள போட்டோக்களை அனுப்பிய அந்த நிர்வாகி ‘யாரை மிரட்டுவதற்கு இந்த போட்டோ?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ராஜேந்திரபாலாஜி மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்தவே, தியாகராஜன் அரிவாளைக் கையிலேந்தி, விதவிதமாகப் போட்டோ எடுத்து, வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார். அமைச்சருக்கு எதிராக, ராஜவர்மன் தரப்பினரும்,  வீரதீரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டதாக நரிக்குடி வட்டாரத்தில் பேசுகின்றனர் என்று கொளுத்திப் போட்டார்.  

 

virudhunagar rajendrabalai's opposite party member

 
ராஜவர்மன் எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டோம். “தியாகராஜன் கையில் அரிவாளா? ஆச்சரியமா இருக்கு. அவரை மாதிரி ஒரு அப்பாவிய பார்க்கவே முடியாது. ஒருவேளை முள் வெட்டுறதுக்காக அரிவாளைக் கையில் எடுத்திருக்கலாம்.” என்று ’ஜோக்’ அடித்துவிட்டு சிரித்தார்.

 
அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜனிடம் பேசினோம்.  “அந்த போட்டோ, ஆவாரங்குளத்துல உள்ள என்னோட தோட்டத்துல எடுத்தது. நான் யாரையும் மிரட்டல. கட்டபொம்மன் நாடகத்துல வர்ற வெள்ளையம்மா பாட்டை பாடிக்கிட்டு, அரிவாளை கையில வச்சிருந்தப்ப எடுத்தது. அந்த அருவா,  தகடு மாதிரி வளையும். இது ஒண்ணும் சீரியஸான விஷயம் இல்லீங்க.” என்று சிரித்தார்.  

 

வெட்டு, குத்து, கொலை மிரட்டல் என்று  விவகாரமாகப் பேசினாலும், விருதுநகர் மாவட்ட ஆளும்கட்சியினரின் அரசியல் என்னவோ, காமெடியாகவே இருக்கிறது. 

 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.