Skip to main content

"எடப்பாடிக்கு அப்படியென்ன அவசரம்?"- ஜவுளிப் பூங்காவுக்கு கடும் எதிர்ப்பு!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா வறண்ட பூமி என்பது யாவரும் அறிந்ததுதான்.  தமிழக அரசு, அந்தத் தாலுகாவில் தாமரைக்குளம், பொட்டல்குளம் பகுதியில்  102 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கைத்தறி மற்றும் கதர்த்துறை சார்பில், தென்மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தொழில் பூங்கா அமைத்திடும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது. காணொளி காட்சி வாயிலாக இத்திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய விழா காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது.  

VIRUDHUNAGA PEOPLES AGAINST  Fierce opposition to textile park


தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என, தாமரைக்குளம், காரைக்குளம்,  எசலிமடை, செட்டிகுளம், மேலக்காஞ்சிரங்குளம், சென்னிலைக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கீழ இடையான்குளம், துலுக்கன்குளம், எஸ்.புதூர், குண்டுகுளம், கம்பாளி, உடுப்புகுளம், ஆவாரம்பட்டி,  ஆனைக்குளம், நொச்சிகுளம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.  அதனால்,  அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் மனுகொடுப்பதற்கு 20 மாவட்ட கிராம மக்களும் திரண்டு வந்தனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். மக்கள் ஆவேசமாகி வாக்குவாதம் செய்தனர். 

VIRUDHUNAGA PEOPLES AGAINST  Fierce opposition to textile park


அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி. நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, மதுரை – தூத்துக்குடி சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு முன்னால், ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக கிராம மக்கள் காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் சிவஞானமோ, அம்மக்களை ஒரு பொருட்டாகவே கருதாமல், மனுவையும் பெற்றுக்கொள்ளாமல், அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார். ஆட்சியரின் செயல் மக்களை கொதிப்படையச் செய்து சாலை மறியலில் ஈடுபட வைத்தது.  

VIRUDHUNAGA PEOPLES AGAINST  Fierce opposition to textile park

 


“இந்தப் பகுதியில் சாயப்பட்டறை துவங்கினால் போராட்டம் வெடிக்கும்..” என்று  விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்த கிராமத்தினர், “3000 ஏக்கர் நஞ்சை நிலம், பத்துக்கு மேற்பட்ட கண்மாய்கள், சாயப்பட்டறை கழிவு நீரால் பாதிப்படையும். விவசாயம், குடிதண்ணீர் மட்டுமல்ல…கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.” என்றார்கள் குமுறலோடு. 

VIRUDHUNAGA PEOPLES AGAINST  Fierce opposition to textile park

இத்தொழில் பூங்கா அமைவதன் மூலம், சுமார் 2000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், சுமார் 2000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற வழிவகை ஏற்படும் என்றும் தமிழக அரசு கருதுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களோ “எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இங்கே வரவிடமாட்டோம்.” என்று போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். 
 

மக்களா? திட்டமா? தமிழக அரசு விரைந்து முடிவெடுத்திட வேண்டும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.