Skip to main content

மணல் குவாரியை முற்றுகையிட்டு மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டம்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

Workers struggle


புதிதாக அமைக்கப்படவிருந்த அரசு மணல் குவாரியை மாட்டு வண்டித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் மற்றும் கோபாலபுரம் கிராமங்களின் பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன், மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் மூலம் 4.87 ஹெக்டேர் பரப்பளவில் 48,750 கன மீட்டர் அளவிற்கு மணல் அள்ள  ஓர் ஆண்டிற்கு அரசு மணல் குவாரி அனுமதிக்கப்பட்டது.


அதேசமயம் இந்த ஆற்றில் நீர்பாசன திட்டத்திற்காக கடந்த 1865 ஆம் ஆண்டு அனைக்கட்டு கட்டப்பட்டு வடக்கு பாசனத் திட்ட வாய்க்கால் மூலம் 44,400 ஏக்கர் பரப்பளவிலும், தெற்கு பாசன திட்ட வாய்க்கால் மூலம் 31,000 ஏக்கர் பரப்பளவிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

 

இந்த அணைக்கட்டின் அருகே புதிதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி தொடங்கியது. இந்த மணல் குவாரி மூலம் லாரிகளில் மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணல் குவாரிக்கு அனுமதி அளித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், விவசாயம் பாதிக்கும் என்று கூறி பா.ம.க. மற்றும் கிராம மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் தற்காலிகமாக மணல்குவாரி மூடப்பட்டது. 

 

இந்நிலையில் மாட்டுவண்டி மணல்குவாரி அமைக்கப்படாததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 3 ஆண்டுகளாக மாட்டுவண்டித் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

 

இந்நிலையில் புதிய மணல் குவாரியில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்கக் கோரி அனைத்து கிராம மாட்டுவண்டித் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் மாட்டு வண்டிகளுடன், அரசு மணல் குவாரியை முற்றுகையிட்டனர்.

 

அதையடுத்து தகவலறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன்,  கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் டைமன் துரை மற்றும் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாட்டுவண்டித் தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தினர். 

 

Ad

 

அப்போது குமாரமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்காக அரசு மணல் குவாரி அமைக்க அளவீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது லாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். அதனால் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் மணல் குவாரிகளில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மணல் குவாரி முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்கக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மாட்டுவண்டித் தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.