Skip to main content

அண்ணியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கொழுந்தன்!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

 

விருத்தாசலம் அருகே அண்ணியை கொலை செய்து, தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்த கொழுந்தனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி - சரோஜோ தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணமாகிய நிலையில் கடைசி பையனான ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் ஆகாத நிலையில்,  கேரளாவில் வேலை செய்து வருகிறார்.  


 

ஒரே குடும்பத்தில் அனைவரும் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தனது சொந்த  ஊருக்கு திரும்பி வந்துள்ளார் ஆறுமுகம். இந்நிலையில் சின்னசாமியின் இரண்டாவது மகனான குழந்தைவேலு மனைவி சிவா (எ) சிவகாமியை வீட்டில் விட்டு, விவசாய வேலைக்கு சென்றுவிட்டார். 
 

அப்போது வீட்டில் இருந்த குழந்தை வேலுவின் மனைவி சிவகாமியை, குழந்தைவேலுவின் தம்பியான ஆறுமுகம் இரும்பு பைப்பால் சிவகாமியின் தலையில் அடித்து பலமாக தாக்கியுள்ளார். சிவகாமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் மயங்கி நிலையில் கீழே கிடந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த  சிவகாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


 

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகாமி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்ததை பார்த்த ஆறுமுகம்,  வீட்டுக்குள்ளே சென்று துணியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மங்கலம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 
 

அதன் பேரில் விரைந்து வந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரண்டு சம்பவங்கள் அப்பகுதியில் நடந்து உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இச்சம்பவத்தில் கொலைக்கான காரணங்கள் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.