Skip to main content

தெருக்களில் மின்விளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏற்றி வாழ்ந்து வரும் மக்கள்! 

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 13- வது வார்டில் உள்ள அண்ணாநகர், கபிலர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக தெரு மின் விளக்குகள் எதுவும் தெரியாததால், இரவு நேரங்களில்  இருள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தினந்தோறும் பயத்தில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.  

virudhachalam 13 ward peoples not get basic facilities


இதனால் தெரு மின்விளக்குகள் சரிசெய்ய கோரி விருத்தாசலம் நகராட்சியில் பல முறை புகார் மனு அளித்தும், முறையிட்டும் நகராட்சி அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இதனால் செய்வதறியாது  அப்பகுதி மக்கள்  இரவு முழுவதும் தீப்பந்தம் ஏற்றி தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.  விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மட்டும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என்றும், குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வாய்க்கால், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மிகவும் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரத்தில் இப்பகுதியில்  இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் இரவு நேரத்தில் பெண் சிறுமிகள் நடமாடும் போது மர்ம நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபடும் செயல்களும் நடந்தேறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தக்க  நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.