Advertisment

நடுவீட்டில் புகுந்த வெள்ளம்... சோப்பு போட்டு ஆனந்த குளியல் போட்ட நபர்!

jl

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை வெளுத்து வாங்கிய கனமழையால், இன்னும் தலைநகரில் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. வட மாவட்டங்களில் சுழன்றடித்த கனமழை தற்போது தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இணையதளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நடுவீட்டில் அமர்ந்து கொண்டு மத்திய வயது உடைய ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே குளிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. வீட்டிற்குள் புகுந்த மழை நீரில் மனுசன் எப்படி என்ஜாய் செய்கிறார் என்று சிலரும், வீடு முழுவதும் தண்ணீர் இருக்கும் போது உனக்கு என்ன சந்தோஷம் வேண்டிக் கிடக்கிறது என்று சிலரும் அந்த வீடியோவில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

VIRAL PHOTO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe