Skip to main content

முத்த வீடியோவை வெளியிட்ட உளவுத்துறை! தலைமறைவாக எஸ்.எஸ்.ஐ!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

தமிழக அரசியலில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் எப்போது எல்லாம் கொந்தளிக்கிறார்களோ அப்போது எல்லாம் சர்ச்சையை கிளப்பும் வீடியோகள் தீடீர் என வைரல் வீடியோக்கள் வெளியாவது வழக்கம். 

 

ஆனால் திருச்சியில் ஒரு சிசிடிவி வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினரை அதிர வைத்திருக்கிறது. திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 54, இவர் கடந்த 12ம் தேதி ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா அவருக்கு வயது 34 என்பவருக்கு தீடீர் என தொடர் முத்தம் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். 

 

 Underground

 

அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா இது குறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் புகாரை எஸ்பிக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஸ்டேஷனில் முத்தம் பரிமாறிக் கொண்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக பாலகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கேமரா பதிவுகள் வெளியாட்களுக்கு போனது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை வெளியிட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட்டது எஸ்பிசிஐடி ஏட்டு தான் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனால் அதிர்ச்சியடைந்த சசிகலா, எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் சென்ற பிறகு அழுது கொண்டே முத்தம் கொடுத்தது குறித்து புகார் கூறினார். அப்போது கேசவன் அவர் இருக்கும் போது சொல்லாமல் இப்போது சொல்கிறாய் என்று சொல்லி விட்டு காலை இது குறித்து பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்று விட்டார். 

 

அப்போது தான் சசிகலாவிற்கு கேசவனுக்கு விபரம் தெரியாமல் இருக்கும் போதே தேவையில்லாமல் உளறி விட்டோம் என பதட்டம் அடைந்து உடனடியாக தனது உறவினரான எஸ்பிசிஐடி ஏட்டு நந்தகுமாருக்கு போன் செய்து பிரச்சனையாகி விட்டது உடனடியாக வருமாறு சசிகலா கூறியிருக்கிறார். அதற்குள்ளாக ஸ்டேஷனில் பதிவான காட்சிகளை தன்னுடைய செல்போனில் சசிகலா டவுன்லோடு செய்துள்ளார். அங்கு வந்த நந்தகுமாரிடம் விபரத்தை கூறிய சசிகலா தனனு செல்போனில் இருந்த காட்சிகளை, அவரது செல்போனுக்கும் அனுப்பியுள்ளார். 

 

 

தற்போது சசிகலா டி.எஸ்.பி ராதகிருஷ்ணன் விசாரணையில் நான் வீடியோவை வெளியிடவில்லை வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து எஸ்பிசிஐடி ஏட்டு நந்தகுமார்தான் வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்கிறார்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம். 

 

இதற்கு இடையில் முதற்கட்ட விசாரணை முடிவில் தீடீர் முத்தம் கொடுத்த எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

அதே நேரத்தில் புகார் கொடுத்த சசிகலா வீட்டிலும் சென்று போலிஸ் சோதனை நடத்தி வருகிறார்கள். முத்த சர்ச்சையில் சிக்கியா சசிகலாவிற்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அதே போல எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணனனுக்கு கல்யாணம் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.