Skip to main content

சீட்டுக்கு 5 லட்சம் டிமாண்ட் வைக்கும் தாமரை... ஆடியோ வைரல்!

Published on 06/02/2022 | Edited on 06/02/2022

 

Kettu Kettutan ... Lotus that puts 5 lakh demand for ace ... Audio viral!

தென்காசி நகராட்சியின் 8- வது வார்டிலிருக்கும் செல்வியை 2011- ல் பா.ஜ.க. நகராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்ததில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2016- ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், தாமரைக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் வற்புறுத்தலின் பேரில் தென்காசி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கரன்சிகள் காலியானதோடு கரையேறவும் முடியாமல் போயிருக்கிறது.

 

இரண்டு முறை தோற்றதால் விக்கிரமாதித்த முயற்சியாக தளராமல் தற்போதைய தென்காசி நகராட்சியின் தனது 8- ம் வார்டு பெண்களுக்கானது என ஒதுக்கப்பட்டதால் போட்டியிடும் பொருட்டு பா.ஜ.க. கட்சித் தலைமைக்கு விருப்பமனுக் கொடுத்தவர் நேர்காணலுக்கும் சென்றிருக்கிறார்.

 

ஆனால் எதிர்பாராத வகையில் கட்சித் தலைமை பொன்னம்மாள் என்பவரிடம் 5 லட்சம் வாங்கிக் கொண்டு அவரை 8- வது வார்டின் வேட்பாளராக அறிவித்ததாக தகவல் செல்விக்குப் போக, அதிர்ச்சியானவர் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ராமராஜை போனில் வறுத்தெடுத்திருக்கிறார்.

Kettu Kettutan ... Lotus that puts 5 lakh demand for ace ... Audio viral!

அரசியல்னா என்னான்னு தெரியாம சிவனேன்னு இருந்த என்னய பிரைன் வாஷ் பண்ணி 2011லயும், 2016ன்னு ரெண்டு தடவையும் தேர்தல்ல போட்டியிட வைச்சீங்க. நான் என்ன செய்தேன். நான் கட்சிக்காக உழைச்சிருக்கேன். எனக்கு ஏன் சீட்டுத் தரல. வேற ஒருத்தருக்கு சீட் குடுத்திருக்கீங்க. அவங்களே சொல்றாங்களே 5 லட்சம் குடுத்திருக்கேன்னு. நான் அறிமுகமானவ. அவங்க புதுசா வந்துருக்காங்க. அந்த வேட்பாளருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க.

 

இதோடு கட்சிக்கும், எனக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. என் வீட்டுக்காரர் எதுக்கும் வரமாட்டார். நானும் என் வீட்டுக்காரரும், இனிமே எதுக்கும் வரமாட்டோம். கட்சி கெட்டுப் போறதுக்கு இந்த மாதிரி பண்றது தான் என்று செல்வி படபடவென பொறிய மாவட்டத் தலைவரான ராமராஜ் செல்வியைச் சமாதானப்படுத்தியுள்ளார்.  நான் யார் கிட்டயும் சீட்டுக்குப் பணம் வாங்கல. இறைவன் உங்களுகு்குத் துணை நிற்பான். நீங்க அடுத்த பதவிக்குப் போகலாம். என்று சமாளித்திருக்கிறார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்களில் வைரல்.

 

இதுகுறித்து நாம் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ராமராஜிடம் கேட்டதற்கு உள்கட்சி விவகாரம் என்று முடித்துக் கொண்டார். செல்வியிடம் கேட்டதில், நடந்தவைகளை மாநிலத் தலைவருக்குத் தெரியப்படுத்திவிட்டேன். பதில் வரல. என்கிறார்.

Kettu Kettutan ... Lotus that puts 5 lakh demand for ace ... Audio viral!

ஆனாலும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்த பா.ஜ.க.வை ஒரு கை பார்க்கிற வகையில், தனது 8- வது வார்டிலேயே பா.ஜ.க.வின் அடையாள துப்பட்டாவோடு சென்று சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டார் செல்வி. ஏற்கனவே இரண்டு முறை தேர்தலைச் சந்தித்து பிரபலமான செல்வியின் மோதல் கட்சிக்குக் கடுமையான நெருக்கடியைத் தரும் என்பதால் பா.ஜ.க.வினர் அவரை வாபஸ் வாங்க வைக்கிற முயற்சியையில் தீவிரமாகிவிட்டனர்.

 

இவர்களின் குடைச்சல் தாளமாட்டாத செல்வியோ, தற்போது தென்காசி நகரைவிட்டு வேறு ஒரு ஊரிலிருக்கிறாராம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.