Skip to main content

அத்துமீறினாரா அதிகாரி? முதல்வர் வரை சென்றுள்ள புகார்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

th

 

திண்டுக்கல் மாநகரில் உள்ள தொழிற்பேட்டை அருகே இருக்கும் ராயல் சிட்டி நகரில், பொதுமக்கள் குடியிருப்பு அமைந்திருக்கும் சாலைக்குள் அரசு அதிகாரிகளுடன் வந்த பொக்லைன் இயந்திரம், அந்தத் தெருவில் வீடுகளுக்கு முன் இருந்த மரங்கள், செடிகள், வீட்டின் வாசற்படி, கழிவுநீர்க் குழாய், குடிநீர்க் குழாய் ஆகியவற்றை இடித்துத் தள்ளியது. இந்தக் காட்சியைக் கண்ட அத்தெரு மக்கள் பதறிப்போயினர். ஏன் இந்த நடவடிக்கை என மக்கள் அங்கு வந்திருந்த அரசு அதிகாரிகளிடம் கேட்க, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து புகாரும் வந்துள்ளதால் இடிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. 

 

அதே குடியிருப்பின், கடைசி வீட்டில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் (D.D.) வரதராஜன் என்பவர் குடியிருக்கிறார். அவர்தான் இந்தப் புகாரைத் தெரிவித்திருக்கிறார் என்று அறிந்த அத்தெரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடு அவர்களைக் கலைய வைத்தனர். 

 

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், "இங்கு கடந்த பத்து வருடங்களாகவே சாக்கடை, சாலை வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கழிவுநீர் உறைகுழி அமைத்து, அந்த நீரை உறிஞ்சுவதற்காக சிறு சிறு செடிகள், மரங்களை வீட்டுக்கு முன்பாக வைத்திருக்கிறோம். இது போக்குவரத்திற்கு இடையூறின்றிதான் இருக்கின்றது. 

 

Violated officer? Complaint that has gone up to the Chief Minister!

 

இங்கு சாலையும் குண்டும் குழியுமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகப் பெய்துவந்த மழையால் சாலையில் செல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறோம். இருந்தபோதிலும், எப்படியோ சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், டி.டி., தனது காரில் வேகமாகச் சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில்தான் தற்போது ஏற்பட்ட சிறு பள்ளங்களும், வீடுகளுக்கு முன் இருக்கும் மரங்களும் அவருக்கு இடையூறாக இருக்கிறது என தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநகராட்சி கமிஷனர் சிவ சுப்பிரமணியத்திடம், ‘எங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதை உடனே அகற்ற வேண்டும்’ என புகார் கொடுத்துள்ளார் டி.டி. வரதராஜன்.

 

இதனைத் தொடர்ந்து கமிஷனரும், மாநகராட்சி அலுவலர்களுடன் பொக்லைன் இயந்திரத்தை இந்தக் குடியிருப்பு பகுதிக்கு அனுப்பி வீடுகளுக்கு அருகிலிருந்த மரங்கள், வீட்டின் வாசற்படி, கழிவுநீர்க் குழாய், குடிநீர்க் குழாய் ஆகியவற்றை கண்மூடித்தனமாக  அதிரடியாக இடித்துத் தள்ளினர்" என்று தெரிவித்தனர். மேலும், டி.டி வரதராஜன் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோருக்குப் புகார் மனு அளித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

 

இந்தச் சம்பவம் குறித்து நாம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜனை தொடர்புகொண்டோம். அப்போது அவர், “நான், பாதையை ஆக்கிரமித்து சிலர் இடையூறாக கழிவுநீர் உறை மற்றும் மரங்கள் வைத்துள்ளதாக மட்டும்தான் புகார் அளித்தேன். மாநகராட்சி சார்பில்தான் எல்லாவற்றையும் அகற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார். 

 

Violated officer? Complaint that has gone up to the Chief Minister!
                                                  ஆட்சியர் விசாகன்

 

அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று (27.10.2021) டி.டி. வரதராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாகன் விவரங்கள் பெறவிருப்பதாகவும் தெரிகிறது.

 

சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜன் பழனி, திண்டுக்கல், தேனி, சங்கரன்கோயில், திருநெல்வேலி, திண்டுக்கல் என அடிக்கடி பணி இடமாறுதலுக்கு உட்படுத்தப்படுபவராகவும் இருந்துவருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.