Skip to main content

விநாயகர் சதுர்த்தி - புதிய விதிகளுக்கு எதிர்ப்பு; பழைய முறைக்கு அனுமதி கேட்டு வழக்கு

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
க்

 

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வகுக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்தும், பழைய முறைப்படி அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்துவதற்கு சிலைகளை கரைப்பதற்கு புதிய விதிகளை உருவாக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், கரைப்பதற்கும், உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் தடையில்லாச் சான்று பெற்று, நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என விதிகளை வகுத்து தமிழக அரசு, கடந்த 9ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

 

இந்த புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பின் தேசிய தலைவர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.குறுகிய கால அவகாசத்தில் தடையில்லா சான்றுகள் பெற முடியாது என்பதால்,  நடப்பாண்டு பழைய முறைப்படி விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

 


------
 

சார்ந்த செய்திகள்

Next Story

மோதலில் முடிந்த விநாகயர் சிலை பிரச்சனை... போலீஸார் குவிப்பு!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Vinayagar statue problem that ended in conflict ... Police concentrated!

 

திருச்செங்கோட்டில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

 

திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் உள்ள கிரிவலப்பாதை பிரிவில் இயங்கி வருகின்ற ஒரு தேவாலயத்தின் பகுதியை சாலை விரிவாக்கத்திற்கு காலி செய்து கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு பிள்ளையார் சிலை வைத்து ஒரு தரப்பினர் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் சிலையை அகற்ற முடியாது எனத் தெரிவித்ததால் அங்கு மோதல் ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் இருதரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் சில மணிநேரம் அங்கு மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

இத்தனை பிரமாண்டமா..? வியப்பில் ஆழ்த்திய விநாயகர் ஊர்வலம்..! (படங்கள்)

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

 

விநாயகர் சதூர்த்தி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்றைய தினம் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. 
 

இந்து முன்னனி சார்பில் சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. திருவல்லிக்கேணி வழியாக மெரினா கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.