Skip to main content

விழுப்புரம் நகராட்சியில் டெண்டர் தகராறு... ஒப்பந்தக்காரர் மீது தாக்குதல்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Vilupuram municipal problem


விழுப்புரம் பழைய பஸ் நிலைய பகுதியில் ஏற்கனவே நகராட்சி மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்ட கடைகள், ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் சீர்கெட்டு இருந்தன. இதையடுத்து புதிதாக அந்தப் பகுதியில் சுமார் 78 கடைகள் கட்டுவதற்கு நகராட்சி மூலம் டெண்டர் கோரப்பட்டது.

 

இதில், பங்கேற்கும் ஒப்பந்தக்காரர்கள் தனித்தனியாக டெபாசிட் தொகையை வங்கிகள் மூலம் டி.டியாக எடுத்து நேற்று மாலைக்குள் நகராட்சி அலுவலகத்தில், டெண்டர் பத்திரத்துடன் இணைத்து ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, டெண்டர் விண்ணப்பங்களை நகராட்சியில் செலுத்துவதற்காக நேற்று காலை முதல் ஒப்பந்தக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். 


நேற்று மாலை 4 மணி வரை டெண்டர் கேட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் வங்கி வரைவோலையுடன் விண்ணப்பங்களைச் செலுத்தினார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த டெண்டர் ஏலம் நகராட்சி நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார். இதற்கான நோட்டீசை நகராட்சி ஊழியர்கள் அலுவலக முகப்பில் ஒட்டினார்கள். இதைக்கண்ட மந்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் அகமது என்பவர் கமிஷனர் அறைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘ஏன் திடீரென ஏலம் நிறுத்தப்படுகிறது’ என்று கோபத்துடன் கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த அரசியல் கட்சியினருக்கும் அகமது விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அகமது சரமாரியாக தாக்கப்பட்டு அவரது சட்டை கிழிந்தது. இந்நிலையில், அகமதுவின் நண்பர்கள் அவரை மீட்டு விழுப்புரம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


இந்தச் சம்பவத்தையடுத்து அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஆபாசமாகப் பேசியதாகவும் கமிஷனர் தட்சிணாமூர்த்தி, டவுன் போலீசில் அகமது மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அகமதுவை கைது செய்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.