Skip to main content

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் காற்று மாசு! கவலையில் சூழலியல் ஆர்வலர்கள்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
d

 

சுமார் 50 நாட்களாக மாசு இல்லாத தூய்மையான காற்றை மக்கள் சுவாசித்தனர். காரணம் தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படும் புகையினால் வளிமண்டலத்தில் மாசு ஏற்படும். இதனால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து வெயிலின் தாக்கம்  அதிகரிக்கவும் இதனால் மழையளவு குறையும் காரணம் என்று கூறப்பட்டது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனங்களின் புகையினால் ஏற்பட்ட மாசு காரணமாக டெல்லியில் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு புகை மையமாகவும், அதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் வாகனங்களை ஷிப்ட் முறையில் இயக்குமாறு அம்மாநில அரசு உத்தரவு போட்டு அதை செயல்படுத்தியது.

ஆனால் இப்போது இந்தியா முழுவதும் மாசற்ற நல்ல காற்றை சுவாசித்து வருகிறார்கள். இந்த கரோனா மூலம் நடந்த மிக நல்ல செயல்களில் காற்றில் மாசு குறைந்ததும் மிக முக்கியமான ஒன்று.

 

 


இப்படிப்பட்ட இந்த நேரத்தில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேல் தனியாலம்பட்டு கிராமத்தின் அருகே  பெரிய பெரிய விஐபிக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும், வசதி படைத்தவர்கள் திருமண நிகழ்வின் போது மணமக்கள் கைகளில் வைத்திருப்பதற்கும் விருந்தினர்களை வரவேற்கும் மரியாதை நிமித்தமாக அளிக்கப்படும் பொக்கே என்கிற பூங்கொத்துக்கள் இந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான தயாரிப்பு கம்பெனி இங்கு உள்ளது.  அதன் மூலம் பொக்கே தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.  

இந்த கம்பெனியில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மொத்தமாக சேர்த்து அவ்வப்போது தீயிட்டு கொளுத்துவார்கள். அதேபோன்று இன்று காலை பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அதில் இருந்து பெருமளவில் கரும்புகை வானில் பரவும் காட்சி பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. 

 


அதோடு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இப்படித்தான் எல்லாம் தலைகீழாக நடக்கும். எல்லாம் பழைய நிலைக்கு மாற போகிறது என்கிறார்கள். திருவெண்ணைநல்லூர் மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பேரளவிற்குதான் எப்போதும் செயல்படும் இப்போதும் அப்படித்தான் செயல்படுகிறது என்று நொந்துகொள்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.