Skip to main content

காதலனுக்காக கணவனை கொலை செய்யச் சொன்ன மனைவி!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
viluppuram

 

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ளது ஒரு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் அருகே ஏரிக்கரையில் உள்ள ஒருமரத்தில் பிணமாக தொங்கினார். கணவரை காணவில்லை என்று அவரது மனைவி தனது மாமனார் குமாரிடம், ஏரிக்குச் சென்று வருவதாகக் கூறி சென்ற கணவர் இதுவரை வீட்டுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

 

உடனே குமார் மற்றும் அவரது உறவினர்களுடன் கார்த்திகேயனை தேடிச் சென்றனர். அப்போது ஏரிக்கரைளில் உள்ள ஒரு மரத்தில் கார்த்திகேயன் பிணமாகத் தொங்கியுள்ளார். உடலில் காயங்கள் இருந்துள்ளன. மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் குமார்புகார் கொடுத்துள்ளார். அதை எடுத்து ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கார்த்திகேயன் மனைவி சாந்தி, கார்த்திகேயன் நண்பர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அவரது நண்பர் சென்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

போலீசாரின் விசாரணையில் கார்த்திகேயன் தனது நண்பர் கலசப்பாக்கம் தாலுக்கா அனிச்சியாம் பட்டு தங்கமணியுணியுடன் கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சேர்ந்து சென்று வந்துள்ளார். இதில் கார்த்திகேயன் தங்கமணியிடம் நெருங்கிய நண்பராகப் பழகியுள்ளனர். இதையடுத்து தங்கமணி கார்த்திகேயனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது தங்கமணிக்கு கார்த்திகேயன் மனைவி சாந்திக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கார்த்திகேயனுக்கு தெரிய வந்துள்ளது. தனது கள்ளக்காதல் கணவனுக்கு தெரிய வந்துள்ளதால் இனிமேல் தங்கமணியை சந்திக்க முடியாது. எனவே கள்ளக்காதல் தொடர வேண்டும் அதற்கு இடையூறாக உள்ள கணவர் கார்த்திகேயனை தங்கமணி மூலம் தீர்த்துக் கட்டி விட்டால் நமது கள்ளக்காதலுக்கு இடையூறு இருக்காது என சாந்தி முடிவு செய்ததோடு அதை தங்கமணியிடமும் கூறியுள்ளார்.

 

இதையடுத்து தங்கமணி அவரது நண்பர் ராமச்சந்திரன் இருவரும் கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று கார்த்திகேயனை மது குடிக்க வருமாறு ராமச்சந்திரனும் தங்கமணியும் ஏரிக்கரைக்கு அழைத்துள்ளனர். தங்கமணியும் சம்பவத்தன்று இரவு பத்தரை மணி அளவில் ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார். மூவரும் அங்கு அமர்ந்து மது குடித்துள்ளனர். மதுபோதையில் தங்கமணியும் ராமச்சந்திரனும் கார்த்திகேயன் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலைத் தரையில் தரதரவென்று இழுத்துச் சென்று அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து தங்கமணி அவரது கூட்டாளி ராமச்சந்திரன் கார்த்திகேயன் மனைவி சாந்தி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.