Skip to main content

மீன் துள்ளாமல் இருக்க வாயில் கவ்விய இளைஞர்! தொண்டையில் சிக்கியதால் மரணம்

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது கீழ்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் அரிகண்டன்.  20 வயது இளைஞரான இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.   அவரது ஊரின் அருகிலுள்ள கணக்கன் குப்பம் கிராமத்தில் ஒரு இரும்புப் பட்டறையில் வேலை செய்து வருகிறார். தற்போது கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசு போடப்பட்டுள்ள தடையால் முடக்கப்பட்டு எல்லோரும் வீடுகளில் முடங்கி இருப்பதுபோல அரி கண்டனும் வீட்டில் இருந்துள்ளார்.

  f


வீட்டில் சும்மாவே இருப்பது போரடிக்கிறது என்று தமிழகத்தில் இவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீட்டுக்கு தெரியாமல், காவல்துறைக்கு தெரியாமல் ஆங்காங்கே டூவீலர்களில் ஊர் சுற்றுகிறார்கள்.  ஆனால் மணிகண்டன் அதுபோல் செய்யாமல் தனது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதற்காக ஏரிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.  மீன் பிடிப்பது பொழுதுபோக்குதான் என்று நினைத்தாலும்,  மீனைக் கொண்டு சமைத்தும் சாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு நேற்று அவர்கள் ஊருக்கு அருகிலுள்ள  அருங்குணம் கிராமத்தில் உள்ள ஏரிக்குச் சென்று தனது நண்பர்களுடன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது தூண்டிலில் ஒரு மீன் மாட்டிக்கொண்டது.  அதை கண்டு சந்தோசம் அடைந்த அரிகண்டன், அந்த மீனை எடுத்து தன் அருகில் வைத்து தனது செல்போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார். தூண்டிலில் இருந்து எடுக்கப்பட்ட மீன் தரையில் கிடந்தது.  அது துள்ளி மீண்டும் ஏரியில் விழுந்து விடுமோ என்று அதை எடுத்து தன் வாயில் வைத்து கவ்வியபடி, தூண்டில் முள்ளின் முனை மீது அடுத்த மீனை பிடிப்பதற்காக, மண்புழுவை அதில் மாட்டிக் கொண்டிருந்தார்.  அப்போது அவரது வாயில் கவ்வியிருந்த மீன்நழுவி  அவரது தொண்டைக்குள் சென்று விட்டது. தொண்டையில் சிக்கிய மீனை வெளியே எடுக்க முடியாமல் அரிகண்டன் திணறியுள்ளார்.
 

nakkheeran app



இதைப்பார்த்த  அவரது நண்பர்கள் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அரிகண்டனை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கே மருத்துவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு  தொண்டையில் இருந்த மீனை வெளியே எடுத்தனர். ஆனால் தொண்டையில் சிக்கிய மீனால் ஏற்கனவே அவதிப்பட்டு வந்த அரிகண்டன் மூச்சுத்திணறலால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இறந்துபோனார்.  இந்த செய்தி கீழ்மலை கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்த ஒரு செயலையும் அவை சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் கவனமாக செய்ய வேண்டும். கொஞ்சம் கவனம் சிதறினால் மரணம் என்பதற்கு அரிகண்டனின் கவனக்குறைவு ஒரு எடுத்துக்காட்டு. தூண்டிலில் புழு மாட்டுவதற்கு அதிலிருந்து எடுத்த மீனை மணிகண்டன் ஒரு ஓரமாக பத்திரப்படுத்திவிட்டு தூண்டிலில் மண்புழுவை மாட்டி இருக்கலாம்.  அப்படி செய்து இருந்தால் அவரது உயிர் போயிருக்காது.  இது சம்பந்தமாக அரிகண்டன் தந்தை மண்ணாங்கட்டி அளித்த புகாரின் பெயரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .
    

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு வாரம்தான் டைம்; 134 இறால் பண்ணைகளுக்கு செக்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Check for 134 shrimp farms; The court gave 6 weeks time

சட்ட விரோதமாகச் செயல்படும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக அரசு மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட வேண்டும் எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி கடலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இறால் பண்ணைகள் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மனுதாரர்கள் அமைத்துள்ள இறால் பண்ணைகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. மேலும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,709 பண்ணைகளில் 2,227 இறால் பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின்  விண்ணப்பங்கள் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. 134 இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சட்ட விரோதமாகத் தமிழகம் முழுவதும் இயங்கும்  இறால் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். ஆறு வாரத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். அவ்வாறு மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story

அரிய வகை மீன்; ஒரே இரவில் கோடீஸ்வரரான மீனவர்

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Fisherman became a millionaire overnight after catching sowa golden fish in Pakistan

 

மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை மீன் சிக்கியதால் ஒரே இரவில் கோடீசுவரரான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச் என்பவர் கடந்த திங்கட்கிழமை அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது  தங்க மீன்கள் என்று அழைக்கப்படும் சோவா மீன்கள் ஹாஜி பலோச் வலையில் சிக்கியுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து மீனவர் ஹாஜி பலோச் கரைக்குத் திரும்பிய உடனே கராச்சியில் உள்ள துறைமுகத்தில் அரிய வகை மீனான சோவா மீனை ஏலம் விட்டுள்ளார். அதில் சோவா மீன்கள் 7 கோடி ரூபாய் வரை ஏலம் போனதால் ஹாஜி பலோச் ஒரே இரவில் கோடீசுவரராக மாறியுள்ளார். இந்தப் பணத்தைத் தன்னுடன் கடலுக்கு வந்த 7 மீனவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரியவகை சோவா மீன் மிகவும் அரிதானதாகவும், அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் மருத்துவ குணாதிசயங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.