Advertisment

எவ்வளவு நேரம்தான் நிக்கிறது... உட்காருவோம்.... 

தமிழகத்தில் இரண்டாவது நாளாக மதுக்கடைகளில் மதுப் பிரியர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று பல்வேறு இடங்களில் அரசு அறிவுறுத்தலைப் பின்பற்றாமல் முண்டியடித்ததால் சில இடங்களில் தடியடி நடந்தது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் 2-ஆவது நாளாக டாஸ்மாக் கடையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுபாட்டில் வாங்க வந்தவர்களை இடைவெளி விட்டு நிற்க வைத்தனர். மதுக்கடை திறப்பதற்கு முன்பாகவே வந்துவிட்டதால் எவ்வளவு நேரம்தான் நிற்பது என அனைவரையும் அப்படியே அமர வைத்துவிட்டனர். ஒவ்வொருவரும் மது பாட்டில்கள் வாங்கச் சென்ற பின்னர், நகர்ந்து நகர்ந்து உட்கார்ந்தனர்.

Advertisment
tasmac shops villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe