Skip to main content

அதிரவைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை... உடந்தையாக இருந்த சிறுமியின் பெரியம்மா உட்பட 9 பேர் கைது!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

vellore senji incident

 

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் சிறுமியின் பெரியம்மா உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் 11 வகுப்பு சிறுமி ஒருவர் பெரியம்மாவின் ஆதரவில் வசித்து வந்தார். 10 ஆம் வகுப்புவரை அந்த சிறுமி சென்னையில் விடுதியில் தங்கி படித்துவந்த நிலையில் தாய், தந்தையை பிரிந்து  செஞ்சியில் பெரியம்மாவுடன் வாழ்ந்துவந்தார். சில நாட்களாக சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற சிறுமி கர்ப்பமடைந்திருந்தது தெரிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிறுமியின் பெரியம்மா சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என ஒன்றும் தெரியாதுபோல் நாடகமாடியுள்ளார்.

 

அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் பெரியம்மாவுக்கும் அதே ஊரை சேர்ந்த 77 வயதான மண்ணாங்கட்டி என்ற முதியவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில், அவரை சந்திக்க வரும்போதெல்லாம் மண்ணாங்கட்டி சிறுமியிடம் அத்துமீறியுள்ளான். அதற்காக சிறுமியின் பெரியம்மாவிடம் பணமும் கொடுத்துள்ளான் மண்ணாங்கட்டி. அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெரியம்மா மகனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களது நண்பர்களையும் அழைத்துவந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இப்படி தொடர் பாலியல் வன்கொடுமையால் சிறுமி சோர்வுற்று காணப்பட்ட நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதை அடுத்து மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாகியிருப்பது தெரிவந்தது. இந்த சம்பவத்தில் சிறுமியின் பெரியம்மா, அவருடைய மகன், அவனது நண்பர்கள், சிறுமியின் பெரியம்மாவுடன் தகாத உறவில் இருந்த 77 வயது மண்ணாங்கட்டி என மொத்தம் 9 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.