Skip to main content

கர்ப்பமடைந்த மாணவி; நண்பனுடன் சேர்ந்து கொலை செய்த காதலன் 

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

villupuram salavanur village eleventh school girl incident 

 

விழுப்புரம் மாவட்டம் சாலவனூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் வேலை செய்யும் போது நாய் ஒன்று நிலத்தை பிராண்டியதில் இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் யார் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் விழுப்புரம் அருகில் உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போனது தெரிய வந்தது. அவர்தான் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் சடலம் என்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி  அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அரியலூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளனர் சிறுமியின் பெற்றோர்.

 

சிறுமி பாட்டி வீட்டில் இருப்பதாக பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். போலீஸ் விசாரணை செய்ததில் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது அகிலன், அவரது நண்பர் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் இருவரும் சேர்ந்து கொலை செய்ததும், இதற்கு உடந்தையாக கக்கனூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்ற இளைஞர் உடலை புதைப்பதற்கு மண்வெட்டி கொண்டு வந்து கொடுத்துள்ளார். மூவரும் சேர்ந்து சுடுகாடு அருகே குழி தோண்டி சிறுமியின் உடலை புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டு. சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சித்தேரிப்பட்டு அகிலன் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அதில் அகிலன் பேண்ட் வாத்திய இசைக் குழுவில் மேளம் வாசிக்கும் பணியை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் கண்டமானடி கிராமத்தில் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு பேண்ட் வாத்தியம் இசைக்க குழுவில் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். செல்போன் மூலம் சில ஆண்டுகளாக காதலை வளர்த்தனர். சிறுமியும் அகிலனும் அவ்வப்போது தனிமையில் பல்வேறு இடங்களுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று ஜாலியாக ஊர் சுற்றி  வந்துள்ளனர். காதலின் நெருக்கம் அதிகரித்ததன் காரணமாக சிறுமி கர்ப்பமானார்.

 

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் அகிலனிடம் வற்புறுத்தி வந்துள்ளார் சிறுமி. திருமணம் செய்ய மறுத்தால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி விடுவேன் என்று மாணவி மிரட்டியுள்ளார். இதன் பிறகு மாணவியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வருமாறு வரவழைத்த அகிலன் அந்த சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார். சம்பவத்தன்று வி. அரியலூர் பகுதியில் சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் அகிலனிடம் வற்புறுத்தி உள்ளார் அதற்கு அகிலன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது தனது நண்பன் அருணையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார் அகிலன் கோபத்துடன் மாணவியை தாக்கியுள்ளார். இதனால் மாணவி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

 

அப்போது அகிலனின் நண்பன் அருண் மாணவியின் கழுத்தில் அவர் அணிந்து இருந்த துப்பட்டாவை போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். உயிரிழந்த சிறுமியை உடலை என்ன செய்வது என்று இருவரும் யோசித்தனர். பிறகு அகிலன் கக்கனூரைச் சேர்ந்த நண்பன் சுரேஷ் குமார் என்பவரை மண்வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார் அதன்படி சுரேஷ் குமார் மண்வெட்டி எடுத்து வந்து கொடுக்க மூவரும் சேர்ந்து மாணவியின் உடலை இருசக்கர வாகனத்தில் சாலவனூர் சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டனர்.

 

சிறுமியின் பெற்றோர் சிறுமி பாட்டி வீட்டில் இருப்பதாக கருதி வந்தனர் அவரது பாட்டியோ அப்பா அம்மாவுடன் சிறுமி கடமாநடையில் இருப்பதாக கருதிக் கொண்டிருந்துள்ளார். தற்போது மாணவி காணாமல் போனது அதன் பேரில் போலீசாரின் விசாரணையில் கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.