Skip to main content

மாவட்ட நிர்வாகம் சீர்கெட காரணம் மாவட்ட ஆட்சியர்- விழுப்புரம் கோட்டாச்சியர் குமரவேல் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

விழுப்புரம் கோட்டாச்சியர் குமரவேல் (RDO) நேற்று பத்திரிகையாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

villupuram rdo blames district collector

 

 

மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தனக்குக் கீழே வேலை செய்பவர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். தவறுக்கு துணை போக சொல்கிறார். உதாரணத்திற்கு எங்கள் அலுவலகத்தில் கிளார்க் வேலை பார்த்த அன்பானந்தன் என்பவர் 22 லட்சம் கையாடல் செய்துவிட்டு, போலீசில் வழக்கு போடப்பட்டு கைதாகி, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவர் சமீபத்தில் அலுவலகம் வந்து என்னிடம், மாவட்ட ஆட்சியரிடம் பேசி விட்டேன். நான் கையாடல் செய்த பணத்தை திரும்ப செலுத்திவிடுகிறேன், எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார்.

நான் இங்கு பணியில் இருக்கும் வரை உங்களுக்கு இங்கு வேலை தர மாட்டேன், அரசு பணத்தை கையாடல் செய்த உங்களுக்கு மீண்டும் இங்கேயே பணி தந்தால் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்றேன். உடனே அவர் நீங்க இங்கு ஆர்டிஓ பணியில் நீடித்தால் தானே என்று என்னை மிரட்டி விட்டு போனார்.

இதற்கு முன்பே வானூர் தாலுக்காவை சேர்ந்த ஒரு வி.ஏ .ஓ வை இங்கிருந்த ஆர் டி ஓ சில பிரச்சனைகளின் அடிப்படையில் பணிமாறுதல் செய்துள்ளார். அந்த விஏஓ வை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற சொல்லி அவர் சார்ந்துள்ள சங்க பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் நான் ஏற்கனவே ஒரு அதிகாரிபோட்ட உத்தரவை நான் மாற்ற முடியாது என்று சொன்னேன். அதனையடுத்து வந்த நீதிமன்ற தீர்ப்பில், ஏற்கனவே உள்ள அதிகாரி உத்தரவு போட்டிருந்தால் அதை மாற்ற தேவையில்லை என்று அறிவுறுத்தபட்டுள்ளது. அதனை புரிந்து கொள்ளாத அந்த சங்கத்தினர் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டனர்.

நான் பயப்படவில்லை. இதை பற்றி மாவட்ட ஆட்சியர் முழுமையாக விபரம் கேட்காமல், அங்க என்னய்யா நடக்குது என்று என்னை சத்தம் போட்டு மிரட்டுகிறார். இப்படி தவறு செய்பவர்களுக்கு நான் துணை போகாததால் எனக்கு பணி மாறுதல் உத்தரவு வந்துள்ளது. இப்படி மாவட்டத்தில் பல்வேறு சீர்கேடுகள் நடக்கின்றன இதற்கு ஆட்சியர் (சுப்பிரமணியன்) வருவாய் அலுவலர் (பிரியா) இவர்களே காரணம்.

உதாரணத்திற்கு இந்த சம்பவங்களை மட்டும் சொல்லியுள்ளேன். முழுமையாக சொன்னால் விடிய விடிய சொல்லிக் கொண்டே போகலாம் என்று கொட்டி தீர்த்தார். ஆர்டிஓ குமரவேல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஆட்சியர் சுப்பிரமணியின், ஆர்டிஓ பணி மாறுதலுக்கு நான் காரணமல்ல தமிழக அளவல் 150 பேர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் இவரும் ஒருவர் என்கிறார்.

பொதுவாகவே மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மந்திரி சண்முகம் மற்றும் மா.செ.குமரகுரு ஆகியோர் மனம் நோகாதபடி சேவை செய்து வருகிறார் என்று மாவட்டம் முழுவதும் பேச்சு இருக்கிறது. இதற்காக நேர்மையான அதிகாரியான குமரவேல் பந்தாடப்படுகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.