Skip to main content

போட்டி போட்டுக்கொண்டு ஓடிய கல்லூரி பேருந்துகள்! பலியான பள்ளிக் குழந்தை! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Villupuram Private college bus accident school kid passed away

 

விழுப்புரம் மாவட்டம், காங்கேயனூரைச் சேர்ந்தவர் அன்பரசன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பாக அன்பரசன் திடீரென உயிரிழந்தார். அதன்பிறகு அவரின் இரண்டு குழந்தைகளில் ஒருவரான கசிசர்மா(5), கடலூர் மாவட்டம், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த தனது தாய் மாமா ரஜினிகாந்த் வீட்டில் வளர்ந்துவந்தார். ரஜினிகாந்த் தனது சகோதரி மகனை பண்ருட்டி அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார். 

 

ஒன்றாம் வகுப்பு படித்து வரும் கவிசர்மாவை விடுமுறைக்காக அவரது தாய் வசித்து வரும் காங்கேயனூர் கிராமத்தில் கொண்டு போய்விட்டிருந்தார் ரஜினிகாந்த். தமிழ்நாடு முழுக்க நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், காங்கேயனூரில் இருந்தா கவிசர்மாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ரஜினிகாந்த் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

 

Villupuram Private college bus accident school kid passed away

 

அப்போது வளவனூர், வாணியம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரஜினிகாந்த் சென்று கொண்டிருந்த போது தனியார் கல்லூரிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்றையொன்று முந்திச் செல்ல போட்டி போட்டுக்கொண்டு சாலையில் அதிவேகமாக வந்தன. அதில் ஒரு பேருந்து மற்றொன்றை முந்திச் செல்ல, அது எதிரே குழந்தை கவிசர்மாவோடு வந்த ரஜினிகாந்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், குழந்தை கவிசர்மா மற்றும் அவனது மாமா ரஜினிகாந்த் இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தனர்.

 

இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் கவிசர்மா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய இரண்டு கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநர்களும் விபத்து ஏற்பட்டதும் உடனடியாக பேருந்தில் இருந்து குதித்து தப்பி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், கல்லூரி பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களை  உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த வளவனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி பேருந்து ஓட்டுனர்கள் இருவரையும் விரைவில் கைது செய்வதாக கூறி அவர்களை கலைந்துபோக செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வளவனூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுனர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.