Skip to main content

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு எஸ்.பி. ஜெயக்குமார் செய்த உதவி! நெகிழும் விழுப்புரம் மக்கள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
s

 

விழுப்புரம் அருகே உள்ளது அகரம் சித்தாமூர் கிராமம்.இந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்கள். இவர்கள் மூவரும் கொரோனா நோய்த் தடுப்பு சம்பந்தமாக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை அடுத்து வெளியில் எங்கும் சென்று வேலை செய்து பிழைக்க முடியாமலும், அதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இல்லாமல் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்கள்.
 

இதையடுத்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்,  அந்தக் குடும்பத்தினரை பற்றி முழுவதும் விசாரித்து, அவர்கள் படும் சிரமத்தை அறிந்து உடனே ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை அவரே வாங்கிச் சென்று அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து  அளித்ததோடு அவர்கள் வீட்டு முன்பு அமர்ந்து அவர்கள் உடல் நலம், குடும்பம் பற்றி அக்கரையோடு  விசாரித்து அவர்கள் குறைகளையும் கேட்டறிந்தார். குடும்பத்தினர் மிகவும் சந்தோஷமடைந்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

s

 

ஏற்கனவே காவல்துறை சார்ந்தவர்களின் குடும்பத்தினர் சிரமப்படுவது அறிந்து அவர்களுக்கும் நல உதவிகள் செய்து வருகிறார். அதேபோல் காவல்துறையைச் சாராத மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் மருத்துவ உதவி படிப்பு உதவி கிடைக்காமல் தவிப்பவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.அதேபோன்று மாவட்டத்தில் சிறப்பாகப் பணி செய்யும் காவல்துறை சார்ந்தவர்களை அழைத்து பாராட்டி பரிசளித்து ஊக்கப்படுத்தி வருவதோடு, காவல்துறையைச் சாராதவர்கள் வீரதீர செயல்கள் செய்பவர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்.

 

http://onelink.to/nknapp


ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரி என்ற பந்தா இல்லாமல் அனைத்து மக்களோடும் அலுவலர்களோடும் பணி செய்து வரும் எஸ். பி. ஜெயக்குமாரை மாவட்ட மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.