Skip to main content

இரண்டு பெண்களை காதலித்த போலீஸ்காரர் சிறையிலடைப்பு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

விழுப்புரம் மாவட்டம் காணைகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). இவரும் கருங்காலிப்பட்டை சேர்ந்த சரத்குமார் (27) என்பவரும். காணைஅரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சரத்குமார் காவல்துறையில் சேர்ந்து தற்போது விழுப்புரம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் போலீஸாராக உள்ளார். இந்த நிலையில் தற்போது விழுப்புரம் ரயில்வே காவல்நிலையத்தில் பெண் போலீஸாக பணி செய்து வரும் காணையை  சேர்ந்த  பிரியங்கா (27) என்பவர்  ராஜலட்சுமியை போன் மூலம் தொடர்பு கொண்டு 'தான் சரத்குமாரை காதலித்து வருகிறேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இனிமேல் நீ அவரோடு பேச கூடாது பழக கூடாது' என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

Villupuram police love issue

 



இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரத்குமார் ராஜலட்சுமியை அழைத்துச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த பெண் போலீஸ் பிரியங்கா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படையில் இருவரும் பணியாற்றிய போது அங்கு பணிபுரிந்த சரத்குமாரும் நானும் காதலித்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் நெருங்கி பழகினோம். இதனால் நான் 4 முறை கர்ப்பம் தரித்து சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு செய்து கொண்டேன்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். அப்படி உள்ள நிலையில் என்னை ஏமாற்றிவிட்டு ராஜலட்சுமியை சரத்குமார் திடீர் திருமணம் செய்துள்ளார். இதை அவரிடம் நான்கேட்டதற்கு மிரட்டுகிறார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வரும் சரத்குமார் உறவினர் கீதா என்பவரும் சேர்ந்து கொண்டு என்னை தாக்கி மிரட்டுகிறார்கள். எனவே சரத்குமார், கீதா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 



இதையடுத்து விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ரேவதி சரத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார. இந்த நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் சரத்குமாரையும் பெண் போலீஸ் பிரியங்காவைவும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். சிக்கலில் இருந்து தப்பிக்க நினைத்த போலீஸ்காரர் சரத்குமார் மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.