Skip to main content

இரண்டு பெண்களை காதலித்த போலீஸ்காரர் சிறையிலடைப்பு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

விழுப்புரம் மாவட்டம் காணைகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). இவரும் கருங்காலிப்பட்டை சேர்ந்த சரத்குமார் (27) என்பவரும். காணைஅரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சரத்குமார் காவல்துறையில் சேர்ந்து தற்போது விழுப்புரம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் போலீஸாராக உள்ளார். இந்த நிலையில் தற்போது விழுப்புரம் ரயில்வே காவல்நிலையத்தில் பெண் போலீஸாக பணி செய்து வரும் காணையை  சேர்ந்த  பிரியங்கா (27) என்பவர்  ராஜலட்சுமியை போன் மூலம் தொடர்பு கொண்டு 'தான் சரத்குமாரை காதலித்து வருகிறேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இனிமேல் நீ அவரோடு பேச கூடாது பழக கூடாது' என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

Villupuram police love issue

 



இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரத்குமார் ராஜலட்சுமியை அழைத்துச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த பெண் போலீஸ் பிரியங்கா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படையில் இருவரும் பணியாற்றிய போது அங்கு பணிபுரிந்த சரத்குமாரும் நானும் காதலித்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் நெருங்கி பழகினோம். இதனால் நான் 4 முறை கர்ப்பம் தரித்து சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு செய்து கொண்டேன்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். அப்படி உள்ள நிலையில் என்னை ஏமாற்றிவிட்டு ராஜலட்சுமியை சரத்குமார் திடீர் திருமணம் செய்துள்ளார். இதை அவரிடம் நான்கேட்டதற்கு மிரட்டுகிறார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வரும் சரத்குமார் உறவினர் கீதா என்பவரும் சேர்ந்து கொண்டு என்னை தாக்கி மிரட்டுகிறார்கள். எனவே சரத்குமார், கீதா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 



இதையடுத்து விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ரேவதி சரத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார. இந்த நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் சரத்குமாரையும் பெண் போலீஸ் பிரியங்காவைவும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். சிக்கலில் இருந்து தப்பிக்க நினைத்த போலீஸ்காரர் சரத்குமார் மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.