Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; தகராறு செய்த ரவுடிக்கு நேர்ந்த சோகம்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

villupuram pidagam nathamedu former panchayat president lakshmanan incident 
லட்சுமணன்

 

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பிடாகம் நத்தமேடு என்ற கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 38). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20 வழக்குகள் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் காவல் துறையின் ரவுடி லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் திடீரென்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து லட்சுமணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன், ஐயப்பன், சக்திவேல் மற்றும் இளையராஜா ஆகிய நால்வரும் லட்சுமணன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இவர்களில் சரவணன், சக்திவேல், ஐயப்பன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் எங்கள் நண்பர்களுடன் ஜானகிபுரம் பகுதியில் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவோம். அப்போது எங்களிடம் லட்சுமணன் பணம் கேட்டு மிரட்டுவார். அவர் அவ்வப்போது வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று மீண்டும் வெளியே வரும்போது குடிப்பதற்கு எங்களிடம் பணம் கேட்டு அடித்து மிரட்டுவார். இதனால் நாங்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தோம்.

 

இந்த நிலையில் எங்கள் நண்பன் சரவணன் அரியலூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு  வைத்திருந்தார். அதை கைவிடுமாறு லட்சுமணன் சரவணனை மிரட்டினார். மேலும் சரவணன் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து கொண்டு சரவணனுக்கு எதிராக லட்சுமணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இப்படி எங்கள் சொந்த பிரச்சனையில் தலையிடுவது, எங்களை அடித்து மிரட்டுவது, பணம் கேட்டு தகராறு செய்வது என லட்சுமணன் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தார்.

 

இவரது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இனிமேல் லட்சுமணனை விட்டு வைக்கக் கூடாது. அவரை கொலை செய்வது என திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று காலை லட்சுமணனுக்கு போன் செய்து இனிமேல் நமக்குள் பிரச்சனை எல்லாம் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் சமாதானமாக போவோம். நடந்த சம்பவங்களை மறந்து விடுவோம். இனிமேல் ஒற்றுமையாக இருப்போம். அதை நாம் மது விருந்து வைத்து கொண்டாட வேண்டும் என்று கூறி லட்சுமணனை ஜானகிபுரம் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்.

 

villupuram pidagam nathamedu former panchayat president lakshmanan incident 
சரவணன் - ஐயப்பன் - சக்திவேல்

 

பகையை மறந்து எங்களுடன் லட்சுமணன் வந்தார். அப்போது நாங்கள் தயாராக வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவினோம். இதில் நிலைதடுமாறி லட்சுமணன் கீழே விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உருட்டுக் கட்டையால் அவரை அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தோம். மேலும் அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றோம்" என மூவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். விழுப்புரம் பகுதியில் ரவுடிகள் மோதலில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.