ADVERTISEMENT
நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓபிஎஸ் விருந்திற்காக வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக வந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அதனையடுத்து ஜக்காம்பட்டி அருகே உள்ள சர்க்யூட் டவரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
ADVERTISEMENT
அதனையடுத்து இன்று அதிகாலை திண்டிவனத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் அவரது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ADVERTISEMENT
Show comments