vilupuram MLA provided relief aid home fire incident family

விழுப்புரம் நகரம் பாணாம்பட்டு பகுதியில் மனோகர்- இருசம்மாள் இவர்களின் கூரை வீடு எரிந்து சேதமானது. இதையறிந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அரிசி, மளிகை பொருள், வேட்டி, சேலை, பாய், தலையணை, ஆகிய உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

Advertisment

இவருடன் விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, வட்டாட்சியர் ஆனந்தகுமார், நகரமன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், முன்னாள் தலைவர் பால்ராஜ், கிளைக் கழக செயலாளர் சண்முகம், பாணாம்பட்டு எம் எம் முருகன், நகரமன்ற உறுப்பினர்கள் ஆர். மணவாளன், வி. புருஷோத்தமன், மாவட்ட சிறுபான்மை அணி எஸ். தாஹிர், நகர இளைஞரணி அமைப்பாளர் செ.மணிகண்டன், திருப்பாச்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் இருந்தனர்.

Advertisment