Skip to main content

அலட்சியம் கருதாமல் மிக எச்சரிக்கையோடு அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் சண்முகம் 

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் பரவாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் அமைச்சர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

  gggg


கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள 23 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டம் மிக முக்கியமானது. 21 நாட்கள் கடந்து விட்டாலும்கூட இனிமேல் பயமில்லை என்று அலட்சியம் கருதாமல் இனிவரும் காலகட்டத்தில் மிக எச்சரிக்கையோடு அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். அரசு உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். தனிப்பட்ட யாரிடமும் பரிவு காட்டக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அங்கு பாதுகாப்பு பணிகளை தீவிமாக கண்காணிக்க வேண்டும். 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மாவட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தடையின்றி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். 
 

nakkheeran app



வியாபாரிகள் வெளியூர் சென்று பொருட்களை கொள்முதல் செய்துகொண்டு வருவதற்கு ஏதுவாக அவர்களுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது பாஸ் வழங்கும் முறை உள்ளது அந்த நிபந்தனைகளை வியாபாரிகளிடம் எடுத்துக் கூறி அவர்கள் எளிதாகச் சென்று காய்கறி மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் ஊரக வேலை திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் மக்கள் கூட்டமாக சேராமல் சமூக விலகலிலிருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மூலம் கிராம ஊராட்சி செயலாளர்கள் பணித்தள பொறுப்பாளர்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக் கூற வேண்டும். விழுப்புரம் நகராட்சி மருத்துவமனையில் 18 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் மூன்று பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிசெய்யும் கூடுதல் டாக்டர்கள் உள்ள இடங்களிலிருந்து நகராட்சி மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகளை குறைவின்றி செய்து தரப்பட வேண்டும். ஏனென்றால் நகரப் பகுதிதான் நோய் பாதிப்பு உள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் அதிகமான அளவில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு நகராட்சி ஆணையர் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த சிரமமுமின்றி அரசு திட்டங்கள் அனைத்தும் சென்றடையும் வகையில் அனைத்து அதிகாரிகளும் அலுவலர்களும் ஊழியர்களும் சிரமங்களை பொறுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.” இவ்வாறு கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.