Skip to main content

இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
villupuram


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ளது மிட்டாமண்டகப்பட்டு காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது கிருஷ்ணன். இவரது மனைவி 65 வயது ராமேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நீரிழிவு ரத்த அழுத்தம் நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக கிருஷ்ணனன் அவ்வப்போது சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு கிருஷ்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவரது குடும்பத்தினர் கிருஷ்ணனை புதுச்சேரி அருகேயுள்ள அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நேற்று முன்தினம் சுமார் பகல் 2 மணி அளவில் கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அன்று முழுவதும் அவரது மனைவி பரமேஸ்வரி அழுதபடி இருந்துள்ளார்.

 

நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் பரமேஸ்வரி மயங்கிக் கீழே விழுந்து இறந்துள்ளார். இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. கணவன் மனைவி இருவரும் சாவிலும் இணைபிரியாத தம்பதிகளாக அடுத்தடுத்து இருவரும் இறந்துள்ளனர். அவர்கள் இருவரது உடல்களையும் உறவினர்கள் நேற்று மாலை அவ்வூர் இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். வாழ்வில் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்த தம்பதிகள் சாவிலும் இணைபிரியாமல் சென்றுள்ளனர். இதுபற்றி அவ்வூர் மக்கள் சோகத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்