Skip to main content

உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மர்ம மரணம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

நாட்டையே உலுக்கிய , நிர்பையா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். ஆனாலும் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதன் தொடர்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குழந்தை சந்தேகமானநிலையில் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Villupuram incident - police investigation

 



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே , பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் வசித்து வந்தார் கோமதி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளநிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

இதையடுத்து புதுச்சேரியை  சேர்ந்த ஒருவரை கோமதி காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்பு இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து அவரின் முதல் இரு பெண் குழந்தைகளும் சொந்த ஊரில் பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளது. 9 வயது மற்றும் 7 வயதான இரு சிறுமியரும் சொந்த ஊரிலேயே பள்ளியில் படித்தும் வந்தனர்.

இந்த நிலையில், பெண்ணின் உறவுக்காரர் கடந்த ஓராண்டாக இரு சிறுமியரையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் , குழந்தைகளை மிரட்டியுள்ளார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு சிறுமியரின் தாய் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது, தங்களுக்கு நடந்த கொடூரங்களை தாயிடம் கூறி குழந்தைகள் அழுதுள்ளது. உறவுக்காரர்களே தனது குழந்தையின் வாழ்கையை அழித்துவிட்டார்களே என்று அதிர்ச்சி அடைந்த கோமதி குழந்தைகளை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியி்ல் சேர்த்து விட்டார் .

 



இந்த விவகாரத்தில் கோமதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் சொந்தங்கள் மத்தியில் கோமதிக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் உறவினர்களின் மிரட்டலால் கோமதி புகார் எதுவும் கொடுக்கவில்லை. சில நாட்களாக மூத்த சிறுமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் , பள்ளியில் ஆசிரியை அதைக் கவனித்துள்ளார். சிறுமியிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை அவர் சொல்லவே அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடனடியாக பள்ளி நிர்வாகம் மூலம் புதுச்சேரி சைல்டு லைனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் தெரிவித்து அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை எனத் தெரியவரவே, சிறுமியர் இருவரும் புதுசேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு ,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட 14 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திண்டிவனம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஜாமினில் வெளியே  வந்து உள்ளார்கள். இந்தநிலையில் சிறுமி திடீர் என்று தற்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வழக்கில் சம்மந்தப்பட்டவர் மிரட்டலாலும், வழக்கில் தண்டனை கிடைத்துவிடுமோ என்பதால் அதில் இருந்து தப்பிக்க குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதபரிசோதனை அறிகை வந்த பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.