Skip to main content

மனைவியை அடித்து கொலை செய்த கணவன்...

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
vvv

 

 

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ளது தாதாம் பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயது கலியபெருமாள். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கும் புதுவை மாநிலம் அறியூரை சேர்ந்த பிரேமா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சேர்ந்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.  இவர்களுக்கு தற்போது ஆறுமாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணமான சில மாதங்களுக்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டை சச்சரவுகள் நடந்து வந்துள்ளன.

 

உறவினர்கள் இருவரையும் அவ்வப்போது சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கலியபெருமாள் மனைவி பிரேமாவிடம்  அவரது பெற்றோரிடம் சென்று வரதட்சனை கேட்டு வாங்கி வருமாறு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரேமா சமீபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஊர் முக்கியஸ்தர்கள்  கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நேற்று முன்தினம் பிரேமாவை கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

 

இப்படிப்பட்ட நிலையில் மது போதையில் வீட்டிற்கு வந்த கலியபெருமாள் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கலியபெருமாள் வீட்டின் அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மனைவி பிரியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கலியபெருமாள்  மாமியார் வீட்டுக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு  தப்பி ஓட முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த ஊர் மக்கள்  உடனடியாக  வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல்  அளித்ததையடுத்து  போலீசார் விரைந்து வந்து கலியபெருமாளை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

 

பிரேமாவின் உடலை மீட்டு  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து  வளவனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.