Skip to main content

தடம் மாறிய மனைவிகள்... நண்பர்களுக்குள் மோதல்... கொலை - சிறை...!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

விழுப்புரத்தில் ரவுடி ராஜா என்கிற காஜா கடந்த 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டான். இக்கொலை சம்பந்தமாக போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ராஜாவின் நண்பர்கள் லாலி கார்த்திக், வினோத் குமார் ஆகிய இருவரையும் போலீசார் விழுப்புரம்  தேசிய நெடுஞ்சாலை  அருகே உள்ள ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர்.

 

Villupuram incident - friends issue

 



போலீசாரிடம் பிடிபட்ட லாலி கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஒரு கொலை வழக்கில் மூவரும் சிறை சென்று சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டோம். இந்தநிலையில் நான் வீட்டில் இல்லாத போது என் வீட்டிற்கு ராஜா அடிக்கடி வருவான். அப்படி வரும்போது என் மனைவியிடம் பேசுவதும் சிரிப்பதும் அடிக்கடி சந்திப்பதுமாக இருந்த நிலையில், அது இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் ராஜா மீது நான் விரோதத்தில் இருந்தேன். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தேன். 

ராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மனைவியைப் பிரிந்து இருந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சாலாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அந்த வீட்டிற்கு எங்கள் நண்பன் வினோத்குமார் அடிக்கடி சென்று வந்தார். அப்போது ராஜாவின் இரண்டாவது மனைவியுடன் வினோத்திற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் வினோத்தை தீர்த்துக்கட்ட ராஜா திட்டமிட்டு வந்தான். இப்படி இருவரும் ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் கூட அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தோம்.

 



இந்நிலையில் என் மனைவியை பிரசவத்திற்காக பையூரில் உள்ள எனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டேன். அந்த நிலையில் ராஜாவின் இரண்டாவது மனைவிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த அவனது மனைவியை பார்க்க நாங்கள் மூவரும் கடந்த 22ஆம் தேதி சென்றோம். ராஜா மனைவியையும் குழந்தை பார்த்துவிட்டு திரும்பும்போது மதுபாட்டில்கள் சைடிஸ் வாங்கிக்கொண்டு என் வீட்டில் என் மனைவி இல்லை என்பதால் மூவரும் அங்கு மது அருந்தி ஜாலியாக சாப்பிடலாம் என கூறி ராஜாவை நானும் வினோத்தும் என் வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

வீட்டில் மூவரும் மது அருந்தினோம். அதற்கு முன்பே வினோத்திடம் என் மனைவியோடு ராஜா கள்ளத்தொடர்பில் உள்ளதால் என்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளான். அதேபோல் நீ ராஜாவின் மனைவியோடு கள்ள தொடர்பு வைத்து உள்ளதால் அவன் உன்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளான். எனவே நமது இருவருக்கும் பொது எதிரியாக உள்ள ராஜாவை தீர்த்துக் கட்டினால் நம் இருவருக்கும் நிம்மதி என்று டீலிங் பேசி முடிவு செய்தோம். வினோத்தும் இந்த டீலிங் அருமையாக உள்ளது என்று சந்தோஷம் அடைந்தான்.

பின்னர் திட்டமிட்டபடி ராஜாவை மது அருந்த வைத்து போதை அதிகமானதும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தோம். ராஜாவின் உடலை வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையின் போதுத நாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த தாலுக்கா போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொலையாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட எஸ்பி. ஜெயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.