Skip to main content

தடம் மாறிய மனைவிகள்... நண்பர்களுக்குள் மோதல்... கொலை - சிறை...!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

விழுப்புரத்தில் ரவுடி ராஜா என்கிற காஜா கடந்த 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டான். இக்கொலை சம்பந்தமாக போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ராஜாவின் நண்பர்கள் லாலி கார்த்திக், வினோத் குமார் ஆகிய இருவரையும் போலீசார் விழுப்புரம்  தேசிய நெடுஞ்சாலை  அருகே உள்ள ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர்.

 

Villupuram incident - friends issue

 



போலீசாரிடம் பிடிபட்ட லாலி கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஒரு கொலை வழக்கில் மூவரும் சிறை சென்று சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டோம். இந்தநிலையில் நான் வீட்டில் இல்லாத போது என் வீட்டிற்கு ராஜா அடிக்கடி வருவான். அப்படி வரும்போது என் மனைவியிடம் பேசுவதும் சிரிப்பதும் அடிக்கடி சந்திப்பதுமாக இருந்த நிலையில், அது இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் ராஜா மீது நான் விரோதத்தில் இருந்தேன். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தேன். 

ராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மனைவியைப் பிரிந்து இருந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சாலாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அந்த வீட்டிற்கு எங்கள் நண்பன் வினோத்குமார் அடிக்கடி சென்று வந்தார். அப்போது ராஜாவின் இரண்டாவது மனைவியுடன் வினோத்திற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் வினோத்தை தீர்த்துக்கட்ட ராஜா திட்டமிட்டு வந்தான். இப்படி இருவரும் ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் கூட அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தோம்.

 



இந்நிலையில் என் மனைவியை பிரசவத்திற்காக பையூரில் உள்ள எனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டேன். அந்த நிலையில் ராஜாவின் இரண்டாவது மனைவிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த அவனது மனைவியை பார்க்க நாங்கள் மூவரும் கடந்த 22ஆம் தேதி சென்றோம். ராஜா மனைவியையும் குழந்தை பார்த்துவிட்டு திரும்பும்போது மதுபாட்டில்கள் சைடிஸ் வாங்கிக்கொண்டு என் வீட்டில் என் மனைவி இல்லை என்பதால் மூவரும் அங்கு மது அருந்தி ஜாலியாக சாப்பிடலாம் என கூறி ராஜாவை நானும் வினோத்தும் என் வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

வீட்டில் மூவரும் மது அருந்தினோம். அதற்கு முன்பே வினோத்திடம் என் மனைவியோடு ராஜா கள்ளத்தொடர்பில் உள்ளதால் என்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளான். அதேபோல் நீ ராஜாவின் மனைவியோடு கள்ள தொடர்பு வைத்து உள்ளதால் அவன் உன்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளான். எனவே நமது இருவருக்கும் பொது எதிரியாக உள்ள ராஜாவை தீர்த்துக் கட்டினால் நம் இருவருக்கும் நிம்மதி என்று டீலிங் பேசி முடிவு செய்தோம். வினோத்தும் இந்த டீலிங் அருமையாக உள்ளது என்று சந்தோஷம் அடைந்தான்.

பின்னர் திட்டமிட்டபடி ராஜாவை மது அருந்த வைத்து போதை அதிகமானதும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தோம். ராஜாவின் உடலை வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையின் போதுத நாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த தாலுக்கா போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொலையாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட எஸ்பி. ஜெயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.