விழுப்புரம் பூந்தோட்டம் மேல் வன்னியர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காஜா( 40). ரவுடியான இவர் விழுப்புரம் கணபதி நகரிலுள்ள சக ரவுடியான கார்த்தி என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
விழுப்புரம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், முன்விரோத தகராறில் குடிபோதையில் அவரது நண்பர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.