Skip to main content

நகைக்காக பெண் கொலை; அதிரடியாகத் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

villupuram district thiruvennainallur incident court judgement 

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி ரமா (வயது 45). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி தங்களுக்குச் சொந்தமான மாடுகளை வயல்வெளி பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே ஊரைச் சேர்ந்த வக்கீல் என்கிற முருகன், ராஜேந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகிய மூன்று பேரும், ரமா கழுத்தில் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டி, மூவரும் ரமாவிடம் சென்று பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர். தங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால் ரமா எவ்வித தயக்கமும் இன்றி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

யாரும் எதிர்பாராத நேரத்தில் சீனிவாசன், தான் வைத்திருந்த மண்வெட்டியால் ரமாவின் முகத்தில் வலது பக்கம் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரமா நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே வடிவேல், ராஜேந்திரன், சீனிவாசன் மூவரும் ரமாவை பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்றனர். மயக்க நிலையில் இருந்த ரமாவை மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். மூவரும் ரமா அணிந்திருந்த கம்மல், தாலிச் செயின் உட்பட மூன்று பவுன் நகைகளைக் கழட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். ரமாவை காணாத அவரது குடும்பத்தினர் அவர் மாடு மேய்த்த பகுதிகளில் தேடிப் பார்த்தபோது., கரும்பு வயலில் ரமா பிணமாக முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்து கிடப்பதைப் வடிவேலு என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்து ரமாவின் உறவினர் தெய்வசிகாமணி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் முருகன், ராஜேந்திரன், சீனிவாசன் ஆகிய மூவரும் சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் இறந்த நிலையில் அவரது சடலத்தை சுடுகாட்டில் புதைப்பதற்கான பணியை மூவரும் செய்ய சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து மண்வெட்டியுடன் வீட்டுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தனியாக இருந்த ரமாவின் கழுத்தில் இருந்த நகைக்காக  மூவரும் கொலை செய்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

 

இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்தது. நீதிபதி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், "குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்று தீர்ப்பில் தெரிவித்தார்.  சிறைத் தண்டனை பெற்ற மூன்று பேரையும், போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக சங்கீதா ஆஜராகி இருந்தார். மூன்று பவுன் நகைக்காக அப்பாவி பெண்ணை கொலை செய்த மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.