Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை!

Published on 13/12/2019 | Edited on 20/12/2019

விழுப்புரம் மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள சித்தேரி அருகே அருண்குமார் வசித்து வந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் தர்ஷினி (6 வயது), பாரதி (3 வயது), 4 மாத குழந்தை யுவஸ்ரீ ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் விழுப்புரம் நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அருண்குமாருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. 
 

இந்நிலையில் டவுன் பகுதியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையாகிறது. இந்த லாட்டரி சீட்டை தொழிலாளர்கள் பலர் மறைமுகமாக வாங்கி அதன் மூலம் பணப்பரிசு பெற்று குடும்ப கஷ்டத்தையும், ஆடம்பரமாகவும் வாழலாம் என்று நினைத்து, தங்கள் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அதுபோல் அருணும் மூணு நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி சம்பாதித்த பணத்தை இழந்துள்ளார். தன் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தாலும், அதைக் கொண்டு ஓரளவு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

VILLUPURAM DISTRICT FAMILY INCIDENT POLICE PEOPLES SHOCK


இருப்பினும் லாட்டரி சீட்டால் குடும்பம் சீரழிந்து விட்டது என்பதை மனதில் வைத்துக் கொண்டு 12- ஆம் தேதி இரவு தன் மனைவி, குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நகை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சயனைடு என்ற விஷத்தை கொடுத்துவிட்டு, பின்பு அந்த விஷத்தை அருண்குமாரும் அருந்திவிட்டு நடு இரவில் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளனர்.
 

அருண்குமார் விஷம் அருந்துவதற்கு முன்பு மூணு நம்பர் லாட்டரி சீட்டு என்னைப்போன்ற பல தொழிலாளர்களின் குடும்பத்தை சீரழித்து விட்டது. காவல்துறை இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு விட்ட, பின் சயனைடு சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரத்தில் மணல் கொள்ளை, மூணு நம்பர் லாட்டரி, புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல் என இரவு நேரங்களில் இது போன்று சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் கொடி கட்டிப்பறக்கிறது.
 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டவுன் டிஎஸ்பி தாலுகா, மேற்கு காவல் நிலையம், என அனைத்து காவல்துறையினரும் வசிக்கும் மாவட்ட தலைநகரில் இப்படிப்பட்டசீரழிவு நிலை தொடர்வதைக் கண்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காவல்துறை, இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு துணை போகிறது என்ற குற்றச்சாட்டும், இதுபோன்ற செயல்களின் மூலம் காவல்துறைக்கு லஞ்சமாக பணம் செல்கிறது. இதனால் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்ற கோபமும் நகர மக்களுக்கு உள்ளது. இனிமேலாவது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.