Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவர் அதிகாரத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Villupuram District Collector revoked Panchayat president authority

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தடுத்தாட்கொண்டூர். இந்த ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவிதா. இவர் மீது ஊராட்சி மன்ற பணிகளில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பழனிக்கு பல்வேறு புகார் சென்றுள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார் மாவட்ட ஆட்சியர். ஊராட்சிப் பணிகளை நேர்மையான முறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் அறிவுரையை புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை சரிவர செய்யாமல் பல்வேறு பணிகளை முடக்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.

 

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் நடைபெறும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றும் பொருட்டும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு ஊராட்சிகளில் சட்டம் 1994 பிரிவு 203 ன் படி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கிராம பணிகளில் நடைபெறும் செலவினங்களுக்காக செக்கில் கையெழுத்திடும் பவரை மாவட்ட ஆட்சியர் பழனி முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மூலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவு நகல் வழங்க சென்றனர். ஆனால் அந்த உத்தரவை தலைவர் சுவிதா வாங்க மறுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் முன்புற சுவரில் ஒட்டி உள்ளனர். ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற முறைகேட்டுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.