Skip to main content

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ வழக்கில் குற்றவாளிகளுக்காக யாரும் ஆஜராகக்கூடாது; மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

villuppuram child jay sri incident police investigation lawyers association


விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களைக் கட்டி வாயில் துணி வைத்து சத்தமில்லாமல் அவரது உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற அதிமுகவைச் சேர்ந்த கலியபெருமாள், முருகன் ஆகிய இருவருக்கும் பிணை கோரவோ அல்லது வழக்கு நடத்தவோ தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "95 சதவீத தீக்காயங்களுடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அந்தச் செய்தி இதயமுள்ள எந்த ஒரு மனிதரையும் பதைபதைக்க வைக்கும், துடிதுடிக்க வைக்கும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். சட்டத்தின் முன் மேற்படி இருவரையும் நிறுத்தி, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, இருவரையும் தூக்குமேடைக்குத் தமிழக அரசு அனுப்பவேண்டும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் தற்போது விளங்குகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு உதாரணம். 

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் குற்றத்தால் பெண்களைப் பாதுகாக்கத் தவறிய மாநிலமாக தமிழகம் அவப்பெயர் சந்தித்துள்ளது. மேலும் தற்பொழுது விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள சம்பவமானது. இந்த அரசுப் பெண்களைப் பாதுகாக்க தவறிவிட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. பெண்கள் வீட்டின் கண்கள். பெண்களைக் காக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தமிழக அரசு தவறி விட்டது.
 

 

மேற்படி இரு குற்றவாளிகளையும் பிணையில் விடாமல், அவர்கள் பிணை கோரினால் அதைக் கடுமையாக அரசுத்தரப்பில் எதிர்க்க வேண்டும். அவர்களைக் காவலில் வைத்து, வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி உச்சகட்ட தண்டனையான தூக்குத் தண்டனையை அவர்களுக்கு கிடைக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அதை விடுத்து விட்டு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களைத் தப்பிக்க வைக்கக் கூடிய படுபாதகச் செயலைத் தமிழக அரசு செய்யக்கூடாது" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் "தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் மேற்படி இரு குற்றவாளிகளுக்கும் ஆஜராக வேண்டாம்," எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.