Skip to main content

போராட்டத்தில்  ஈடுபட்ட கிராம மக்கள்... தலைமையேற்று நடத்திய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

Villagers involved in the struggle; Husband of the Panchayat President who presided

 

ஜெயங்கொண்டம் அருகே பெரிய வளையம் கிராமத்தில் தேசிய புறவழிச் சாலையில் பணி நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், பெரியவளையம் கிராம மக்கள் பாதுகாப்பான முறையில் செல்லவும், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் சாலையின் நடுவே பாலம் அமைத்து தர வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்த நிலையில், பெரியவளையம் கிராமத்தில் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுக்குரிய இழப்பீடு தொகை விரைவில் வழங்கக் கோரியும் சாலையின் நடுவே பாலம் அமைத்துத் தர வேண்டுமெனவும் கிராம மக்கள் புறவழிச்சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியும் இயந்திரங்களை முற்றுகையிட்டும் நேற்று முன்தினம் (7-8-2021) காலை எட்டு மணி அளவில் ஊராட்சி மன்றத்  தலைவரின் கணவர் சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடத்தினார்கள்.

 

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதற்கான ஏற்பாடுகள் செய்வதாக வாக்குறுதி கொடுத்ததை அடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றார்கள். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்காமல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்கவும் அதுவரை பணியைத் துவங்கக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இழப்பீட்டு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால், சாலை பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். பாலம் அமைப்பது குறித்து மக்கள் கூறுவது, சுமார் ஐந்து கிராமங்கள் இந்த சாலையின் வழியாக சென்று பயனடைகிறார்கள். அதுமட்டுமின்றி மருத்துவமனைக்குச் செல்வதற்கு இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.