Skip to main content

கரோனாவால் ஒருவர் பலி... பீதியில் ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்கள்..! 

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

One person passes away by Corona ... Villagers fleeing in panic

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கனகம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் கடந்த ஒருவார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், மருத்துவமனைகளின் சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று கருதி வீடு திரும்பியுள்ளார். வீட்டின் அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவரது உடல் நிலையைப் பார்த்து அவருக்குக் கரோனா பாதிப்புதான் என்று கருதி, அவரது வீட்டு அருகில் கூட செல்லாமல், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட பார்க்காமல், மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்காமல், மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளனர்.

 

மேலும், அவர் வீட்டிலேயே அடைந்து கிடந்திருக்கிறார். இந்நிலையில், கொளஞ்சி நேற்று (05.05.2021) இரவு எட்டு மணி அளவில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய மனைவி, 10 வயது பெண் குழந்தை, 8 வயது ஆண் குழந்தை என அனைவரும் கத்திக் கதறி அழுதனர். அதைப் பார்த்தும் அக்கம்பக்கத்தினர் யாரும் அருகில் கூட செல்லவில்லை. அரை மணி நேரத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் அவரது பிணத்தைக் கூட பார்க்க வரவில்லை. அவர்கள் பெரும் அச்சத்தில் இருந்ததால், ஊராட்சி நிர்வாகம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அவரை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

 

இதையடுத்து, கொளஞ்சி கரோனாவால் உயிரிழந்துள்ளார் என்ற பீதியில் ஊரைவிட்டு அலறி ஓடிய பொதுமக்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. தற்போது ஊரில் 10 சதவீத மக்கள் கூட இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் யாரும் இந்தக் கிராமத்தைப் பார்வையிட கூட வரவில்லை என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலேயும் வயதானவர்களை மட்டும் விட்டுவிட்டு மீதி நபர்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர். சுகாதாரத்துறை உடனடியாக இந்தக் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, தடுப்பூசி வழங்கி கிராமத்தை இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.