Skip to main content

அரசாங்கத்தால் மூடப்பட்ட மற்றொரு பள்ளியை திறக்க கிராம மக்கள் தீர்மானம்... முயற்சியில் பத்திரிகை நண்பர்கள்!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

தமிழ்நாட்டில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம். மூடிய பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 46 அரசுப் பள்ளிகளை மூடி சாதனை படைத்துள்ளது தமிழக அரசு.

அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் சின்னபட்டமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என 2 அரசுப்பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று மூடினார்கள். இதில் சின்னப்பட்டமங்களத்தில் அவசர அவசரமாக நூலகத்தையும் திறந்துவிட்டனர். ஆனால் குளத்தூரில் நூலகம் திறக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

 

Villagers' decision to open another school closed by government ...

 

 

இந்த நிலையில்தான் பள்ளியை பூட்டிய நாளில் சக பத்திரிகை நண்பருடன் குளத்தூர் சென்று கிராமத்தினரை சந்தித்து அரசு பள்ளியின் அவசியங்கள் குறித்து பேசினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூடப்பட்ட பள்ளியை திறக்க எங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறோம் பள்ளியை திறக்க வேண்டும் என்று கிராமம் கூடி தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பிவை வைத்தனர். நாமும் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்த நிலையில் மாணவர்கள் செர்ந்தால் பள்ளியை திறப்போம் என்றனர் அதிகாரிகள். அதன்படி 13 ந் தேதி 11 மாணவர்களுடன் பெற்றோர்களும், கிராமத்தினரும் பள்ளியில் காலை 9 மணி முதல் காத்திருந்தனர். 10 மணிக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச் செல்வம், மற்றும் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் வந்து மாணவர்களின் வயது உள்பட அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு பள்ளியை திறந்தனர். அதே நேரத்தில் அங்கு வந்திருந்த நூலக அலுவலர்கள் நூலகம் திறக்கும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

 

Villagers' decision to open another school closed by government ...

 

இந்த பள்ளி திறக்கப்பட்டதும் நாம் வழக்கம் போல பத்திரிகை நண்பருடன் அரசால் மூடப்பட்டு நூலகம் திறக்கப்பட்ட சின்னப்பட்டமங்களம் பள்ளிக்குச் சென்றோம்.  ஊருக்குள் நுழையும் முன்பே அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோரிடம் அரசுப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும். உங்கள் குழந்தையை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டோம். தாராளமாக அனுப்புகிறேன். பள்ளியை திறக்க வழி செய்யுங்கள் என்றார். 

 

Villagers' decision to open another school closed by government ...


தொடர்ந்து  பயணித்தோம்.. பள்ளி வளாகத்தில் மாடுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது அருகில்  இருந்த தேவாலயத்தில் பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சென்று பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் வீட்டு வாசலில் உள்ள பள்ளியை மூடிவிட்டு பணத்தை செலவு செய்து பல கி.மீ தூரத்திற்கு உங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டுமா? என்று நாம் பேச்சை தொடங்கியதும் பள்ளிக் கூடத்தை திறக்க வேண்டும் என்றனர்.  கிராம கூட்டத்தை கூட்டி கிராம தீர்மானம் எழுதி மாணவர்களின் பெயர் பட்டியலை கொடுத்தால் அதிகாரிகள் வந்து திறப்பார்கள் என்றோம். இந்தநிலையில்தான் தீர்மானம் எழுதிவைத்துவிட்டோம் என்றனர் அந்த பெண்கள்.

 

Villagers' decision to open another school closed by government ...


தொடர்ந்து இப்பள்ளியின் தொடக்க கால முன்னாள் மாணவரும், ஓய்வு ஆசிரியருமானஅருளானந்தம், கிராம தலைவர் தோமாஸ் உள்ளிட்டவர்களை தேவாலையத்தில் சந்தித்து அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதும் மூடிய பள்ளியை திறந்தே ஆகவேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னார்கள் கிராம மக்களுடன் இணைந்து.. கிராம மக்களால் எழுதப்பட்ட தீர்மானத்தை ஆவுடையார்கோயில் வட்டார கல்வி அலுவலரிடம் கொடுத்துவிட்டு பள்ளியை திறக்க அழைப்பு கொடுங்கள் வந்து திறப்பார்கள் என்று கிராம மக்களிடம் சொன்னதுடன் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நாம் தகவல் கொடுத்தோம். 

 

Villagers' decision to open another school closed by government ...

 

மாணவர்கள் சேர்க்கை இருந்தால் உடனே பள்ளியை திறக்கலாம் என்றனர். இந்த வாரத்திற்குள் தமிழ்நாட்டில் தமிழக அரசால் மூடப்பட்ட 2 வது அரசுப் பள்ளியை திறந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டோம். தமிழ்நாட்டில் மூடப்பட்ட 46 அரசுப் பள்ளிகளில் முதல் பள்ளியாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளி திறக்கப்பட்டுவிட்டது.  2 வது பள்ளியாக சின்னப்பட்டமங்களமும் திறக்கப்பட உள்ளது. 

இதேபோல மற்ற மாவட்டங்களில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க அந்தந்த கிராம இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்தால் திறந்துவிடலாம். நம் தலைமுறையில் பள்ளிகளை திறந்தோம் என்பது பெருமை. ஒரு பள்ளியை பூட்டினோம் என்பது அவமானம்.முயற்சி செய்யுங்கள் அரசால் மூடப்பட்ட 46 அரசுப்பள்ளிகளையும் திறப்போம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.