Skip to main content

அதிகாரிகள் ஆணவத்தால் ஒருவருடமாக இருளில் தவிக்கும் கிராமம்... இனியாவது வெளிச்சம் வருமா! 

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவிற்கான மின்சார இணைப்புகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜாபுயல் தாக்குதலால் வயல் வெளியில் குடியிருப்புக்கு பின்புறமாக சென்ற மின்கம்பங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எல்லா கிராமங்களுக்கும் போல தங்கள் கிராமத்திற்கும் மின் இணைப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயக் குடும்பங்கள் குழந்தைகளுடன் இருளில் வாழ்ந்து வரும் கொடுமை தொடர்கிறது.

 

The village where the authorities are brave in the dark for a year...

 

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், மின்துறை  மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்சார துறை, காவல்துறையினர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. வருவாய் துறை மூலம் நில அளவை செய்து சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய சாலையில் மின்கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுக்க தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் உத்திரவிட்டதை தொடர்ந்து மின்சாரம் வரும் என்றிருந்தனர் பயனில்லை.

சிறப்பு அனுமதி வழங்கி கம்பங்கள் நடப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் மின் இணைப்பு மட்டும் வழங்காமல் ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி இயற்கை சீற்றங்கள் ஏற்ப்படும் நிலையில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி தவிக்கும் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தஞ்சை வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்று பெண்கள், குழந்தைகள் என விவசாயிகள் 200 பேர் கைதானார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.

தீபாவளி நெருங்கி வரும் வேலையில் உடன் மின் இணைப்பு வழங்கி விவசாயக் குடும்பங்களை பாதுகாத்திட அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று சென்னை மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இருளில் தவிக்கும் கிராம மக்களுக்கு உடனடியாக மின்சாரம் வழக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை. மனித உரிமையை மீறி அதிகாரிகள் செயல்படுவதால் தான் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுடன்  சென்று புகார் அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையம் உறுதி அளித்துள்ளது என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன். இவர்களுடன்  மூத்த வழக்கறிஞர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் ராமராஜ், மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.