Skip to main content

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்..!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

வனத்துறையால் 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு பொதுமக்கள் 1000 இ-போஸ்ட் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

வனத்துறையால் கடந்த 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு பொதுமக்கள் 1000 இ-போஸ்ட் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் கீரப்பாக்கம் ஊராட்சியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

people struggle to repair the road ..!

 

சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வனத்துறையால் கடந்த 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம்  சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 1000இ-போஸ்ட் தயார் செய்து வைத்துள்ள பொதுமக்கள் முதற்கட்டமாக 100 மனுக்களை தாம்பரத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று அனுப்பி வைத்து இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

people struggle to repair the road ..!

 

இதுகுறித்து குடியரசு தலைவருக்கு கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறுகையில், மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 14 கி.மீ கொண்ட ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது. இச்சாலையை 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் காட்டூரிலிரிந்து அருங்கால் வரையிலும், இதுபோல் நல்லம்பாக்கத்திலிருந்து ஊளைமாஞ்சேரி கிரஷர் பகுதி வரையிலும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை உள்ளதால் அதற்கு இரண்டு மடங்கு இடம் ஒதுக்கி கொடுத்தால்தான் நெடுஞ்சாலை  துறையினருக்கு சாலை அமைக்க அனுமதி கொடுப்போம் என்று கூறி வனத்துறை குறுக்கிட்டுள்ளதால் மேற்படி சாலை அமைக்கும் பணி கடந்த 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது . 

 

 

இதில் மேற்படி சாலைகளில் இயங்கி வந்த வழித்தட எண் 60கே, 60டி என்ற தமிழக அரசு பேருந்துகளும், 55டி என்ற இரண்டு மாநகர பேருந்துகளும் கடந்த 10 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது . இதேபோல் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கி வைத்த எஸ்5 என்ற இரண்டு மினி மாநகர பேருந்துகளும் தற்போது கடந்த ஒரு வருடமாக மேற்படி தடத்தில் பஸ் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது . இதனால் காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், கல்வாய் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. மேலும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு பொதுமக்களாகிய எங்களை முட்டாளாக்கி வருகின்றனர். எனவே குடியரசு தலைவர் தலையிட்டு வனத்துறையின் முட்டுகட்டையால் கடந்த 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தால் கீரப்பாக்கம் ஊராட்சியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது