Skip to main content

ஊராட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் யார்? இதிலும் போட்டியா?

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 கிராம ஊராட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் 64 தலைவர்களை மக்கள் தேர்வு செய்தனர். இதன்பிறகு கடந்த காலங்களில் ஒவ்வொரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததும் அந்த அந்தந்த ஒன்றிய அளவில் உள்ள ஊராட்சி தலைவர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு என ஏற்படுத்துவது உண்டு.

 

village presidents election issue

 



இந்த கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், துணைத்தலைவர்,  துணைச் செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள் ஒன்றுகூடி முறையாக தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள். இப்படி தேர்வு செய்த பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து தங்களின் ஊராட்சிகளுக்கு தேவையான  திட்டங்களை செய்து தருமாறு ஒற்றுமையுடன் வலியுறுத்துவார்கள்.

இதன்படி தமிழகத்தில் பல ஒன்றியங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி கூட்டமைப்பு பொறுப்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். அதேபோன்று சமீபத்தில் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி கூட்டமைப்பின் தலைவராக கொத்தனூர், செல்வக்குமாரி, இரகுநாதன் செயலாளராக கோவிலூர் வீரமுத்து மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து ஒன்றிய ஆணையர்கள் இடம் கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இலங்கியனுர் ஊராட்சித் தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் வேப்பூரில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 40 தலைவர்கள் கலந்து கொண்டனர். சௌந்தரராஜன் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர். இப்படி இரு தரப்பும் தாங்கள் தான் கூட்டமைப்பு தலைவர் எனக் கூறுகின்றனர். முதல் தரப்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் 50 தலைவர்கள் கலந்து கொண்டதாக அறிவித்தனர். இப்போது சவுந்தரராஜன் தலைமையில் 40 பேர் கலந்துகொண்டதாக அறிவித்துள்ளனர். ஆனால் ஒன்றியத்தில் மொத்தமே 64 ஊராட்சி தலைவர்கள் தான் உள்ளனர். இதில் எந்த கூட்டமைப்பு முறையாக தேர்வு செய்யப்பட்டது என்ற குழப்பம் அதிகாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. 

எனவே இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து முறையாக கூட்டமைப்பு பொறுப்பாளர்களை தேர்வு செய்து, அதிகாரிகளை சந்தித்த இவர்கள் கோரிக்கைகளை பிரச்சினைகளை அதிகாரிகள் முன்வைத்தால் அவர்கள் தீர்த்து வைப்பார்கள். அனைத்து தலைவர்களும் ஒற்றுமையோடு இருந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு சரியாக  இருக்கும் என்ன செய்யப்போகிறார்கள் ஊராட்சித் தலைவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.