Skip to main content

"எங்க முறைப்படி திருவிழா நடத்தணும்" - வெயிலில் 7 மணிநேரம் அமர்ந்த மக்கள்

Published on 20/05/2018 | Edited on 21/05/2018

 

k t

 


    கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த உரிமை வேண்டும் என்று ஒரு குடியிருப்பு மக்கள் 7 மணி நேரம் கோயில் முன்பு சுடும் வெயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராம காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலேயே மிகப்பெரிய பிரமாண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோயில். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பூ சொறிதல், காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி  10 நாட்கள் வரை நடத்தப்படும். அதே போல கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை பூ சொறிதல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திருவிழா நடத்துவதற்காண ஏற்பாடுகள் நடந்து வந்தது. 

 

    இரவில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஒரு குடியிருப்பு மக்கள் திடீரென கோயில் முன்பு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு வழக்கமான முறையிலும், நீதிமன்ற உத்தரவுபடியும் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த உரிமை வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் அந்த மக்களிடம் சமாதானம் பேசி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆனால் தர்ணாவில் இருந்த மக்கள் உரிமை கிடைக்கும் வரை கோயிலுக்குள் வரமாட்டோம் என்று மீண்டும் வெளியே வந்து வெயிலில் அமர்ந்துவிட்டனர். 

 

    ஒரு குடியிருப்பு மக்கள் நீண்ட நேரமாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள தகவல் அறிந்து கோயில் நிர்வாகி செய்கோடன் உள்ளிட்ட கரை நிர்வாகிகள். கிராமத்தினர், வருவாய் துறை அதிகாரிகள் வட்டாட்சியர் பொருப்பு யோகேஸ்வரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கிராம நிர்வாக அலுவலர் பொருப்பு அருள்வேந்தன், கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்ர் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கமாக முறைப்படியும் நீதிமன்ற உத்தரவுப்படியும் தர்ணாவில் ஈடுபட்டுள்ள குடியிருப்பு மக்கள் மாலை 6 மணி முதல் இரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்கள் 7 மணி நேர போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு காப்புக்கட்டுவதற்காண பணிகள் நடத்தப்பட்டது.
    ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மேலும் கரை நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.