Advertisment

அரசு பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமித்த கிராம மக்கள்!!

p

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குவலையப்பட்டியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் மூடியிருந்தது. ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவர்களும் பள்ளி இல்லாதால் படிப்பை மறந்து விளையாட ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டது.

Advertisment

அந்த வகையில் இந்த பள்ளிக்கு ஏற்கனவே 2 பயிற்சி ஆசிரியர்களை அதிகாரிகள் நியமித்தனர். பள்ளியில் 90 க்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு 2 ஆசிரியர்கள் போதாது என்ற நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,பொதுமக்களும் இணைந்து அப்பகுதியில் படித்த 2 பட்டதாரிகளை நியமித்தனர். இதனையடுத்து 4 ஆசிரியர்களுடன் பள்ளி நேற்று முதல் செயல்பட ஆரம்பித்தது. 2வது நாளாக இன்றும் பள்ளி இயங்கியது. இது கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thiruchy protest jacto geo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe