Skip to main content

இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுத்த குக்கிராமத்து சிங்கம் கோமதி

Published on 23/04/2019 | Edited on 23/04/2019


23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று இந்தியாவிற்கு வரலாறு சாதனை படைத்துள்ளார்.

 

 The village lion Gomathi who gave gold to India


திருச்சி புனித சிலுவை கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.. எப்போதும் தடகள போட்டியை மட்டும் கடைசி வரை விடவில்லை. என்பதால் அவருடைய விட முயற்சி இந்தியாவிற்கு தங்கத்தை பெற்று தந்திருக்கிறது. 

 

 The village lion Gomathi who gave gold to India



திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முடிகண்டம் என்கிற கிராமத்தில் ஒரு பண்ணையில் கூலித்தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர் ந.மாரிமுத்து. இவர் தன்னுடைய கடைசி மகளான கோமதி. அதிகாலை 3 மணிக்கு எழுந்ததும் அவரது தந்தை மாரிமுத்து சைக்கிளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு மைதானத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய விடமுயற்சிக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறார். 

 



மாரிமுத்துவுக்கு ஒரு மகன், 3 மகள்களுடன் குடும்பம் வறுமையில் தவித்தபோது மாரிமுத்து - ராசாத்தி தம்பதியினர் தங்களது கடைசி மகளான கோமதியின் தடகள பயிற்சிக்கு ஊக்கமளித்து தொடர்ச்சியாக போட்டிகளில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்கள். இதன் விளைவாக 2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார். 

 

 The village lion Gomathi who gave gold to India



இதற்கிடையே அவரின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

 



இருப்பினும், தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி. தற்போது அவர் விளையாட்டு பிரிவுகளில் தேர்ச்சி பெற்று பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். இருந்தாலும் தொடர்ச்சியாக தடகள போட்டியில் கலந்து கொண்டவரின் விட முயற்சி இந்தியாவிற்கு தங்கத்தை வென்று காட்டியிருக்கிறார். 

 

 The village lion Gomathi who gave gold to India

 


நேற்று நடந்த இந்தப் போட்டியில் கோமதி பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற தகவல் கூட செய்தியாளர்கள் இங்கு வந்ததற்குப் பிறகுதான் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது இந்த கிராமத்தில் இருந்து பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தொடர்வதற்கு அதிகாலை 3 மணிக்கே எழுந்து நடந்து செல்வதும் பேருந்தில் சென்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுப்பதும் அவரது வாழ்க்கையில் வாடிக்கையான ஒன்றாக மாறி இருந்தது கோமதியின் வளர்ச்சியில் அவரது தந்தையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 


அவர் வாழ்ந்த காலத்தில் தன் மகள் ஒரு சாதனையாளராக மாற வேண்டும் என்ற முனைப்போடு கோமதிக்கு உறுதுணையாகவும், ஊக்கமாகவும் இருந்துள்ளார் வறுமையிலும் தொடர்ச்சியாக விடமுயற்சியாக தன் மகள் வாங்கி குவித்த வெற்றி பதக்கங்களை கோமதியின் அம்மா ராசாத்தி குவியாலாக கையில் எடுத்த சந்தோஷப்பட்ட காட்சி இந்த வெற்றியையும் வளர்ச்சியையும் பார்ப்பதற்கு மாரிமுத்து இல்லை என்ற கவலை அவரது குடும்பத்தினரிடம் மேலோங்கியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Nirav Chopra made history by winning gold medal again

 

19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடந்த 9 நாட்களாக நடந்து வந்த போட்டியில் நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், பங்குபெற்ற 12 போட்டியாளர்களில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 3 இந்தியர்கள் கலந்து கொண்டனர். அதனால், இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

 

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி 2 வது சுற்றில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2வது இடத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 84.77 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 5வது இடத்தையும், டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6வது இடத்தையும் பிடித்தனர். 

 

நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், கடந்த ஆண்டு இதே நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று இருந்தனர். தங்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆண்கள் அணிகளுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் 17 அணியினர் இரு குழுவாகப் பிரிந்து தகுதி சுற்றில் ஓடினர். முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழுவினர் 2 நிமிடம் 59.05 வினாடிகளில் இலக்கை அடைந்து 2வது இடத்தை பிடித்து 8 அணிகளில் ஒன்றாக இறுதி சுற்றில் நுழைந்தனர்.  2 நிமிடம் 58.47 வினாடிகளில் இலக்கை அடைந்து அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்தது. இதற்கு முன்பு ஜப்பான் 2 நிமிடம் 59.51 வினாடிகளில் எட்டியதே ஆசிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணியினர் முறியடித்தனர். 

 

 

 

 

Next Story

கோமதி மாரிமுத்து தடகளப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை...

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

gomathi marimuthu banned from athletics for four years


ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதோடு, அவருக்குப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 
 


கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்காலத் தடை விதித்து இந்தியத் தடகள சம்மேளனம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

ஆசியப் போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காகக் கோமதியின் சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என்று ஆசியத் தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட 'பி' மாதிரி சோதனையும் கோமதிக்கு எதிராக அமைந்த நிலையில், அவருக்குப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு.