Skip to main content

முதியோர் இல்லமாக மாறிய கிராம நூலகம்  மாணவர்கள் படிக்க முடியாமல் அவதி!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் குறிப்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்திய ஊராட்சிகளிலும் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் கிராமப்புற நூலகங்கள் திறக்கப்பட்டன. 
 

இவ்வாறு திறக்கப்பட்ட நூலகங்கள் நாளடைவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் மாறி வருகிறது. குறிப்பாக, கிராமப்புற நூலகங்களால் ஏழை மாணவ- மாணவியர்கள் சிரமமின்றி அனைத்து நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படித்து நாட்டு நடப்புகள் மற்றும் பொது அறிவுகளை வளர்த்துக் கொண்டனர். 
 

 Village Library, which has become an elderly home Students are unable to read!


கடந்த நான்கு வருடங்களாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற நூலகங்கள் ஊராட்சியின் பழைய இரும்பு குடோனாகவும், மின்மோட்டார்களிலிருந்து கழற்றப்படும் குழாய்கள், பைப்புகள் மற்றும் மின்மோட்டார்கள் தெருவிளக்குகளை போட்டு வைக்கும் குடோன்களாக மாற்றி வருகின்றன. குறிப்பாக, ஆத்தூர் ஒன்றியம், அம்பாத்துரை ஊராட்சியில் ஊராட்சி நூலகம், நடுப்பட்டியில் உள்ளது. 
 

தற்போது அந்த நூலகம் ஊராட்சியில் பணிபுரியும் உறவினர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த நூலகம் முதியோர் இல்லமாகவும், சமையல் கூடமாகவும் மாறி வருகிறது. அலமாரியில் புத்தகங்கள் இருக்க மறுபுறத்தில் சமையல் பாத்திரங்கள் காய்கறிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நடுப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நூலகத்தின் உள்ளே சென்றால், அங்கு தங்கியிருக்கும் முதியோர் ஒருவர் குழந்தைகளை விரட்டி விடுவதாகவும் கூறப்படுகிறது. 

 Village Library, which has become an elderly home Students are unable to read!



கல்விக்கண்ணை திறக்கும் நூலகம் தற்போது ஆத்தூர் ஒன்றியத்தில் மாட்டுத்தொழுவமாகவும் முதியோர் இல்லமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி வருவது வேதனையாக உள்ளது. நூலகங்கள் பூட்டியே கிடப்பதால் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு மாணவ-மாணவியர்கள் கடும் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற நூலகங்களையும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ரோட்டை மறித்து  இ.பி.எஸ்-க்காக மேடை!  தே.மு.தி.க.வை மதிக்காத அ.தி.மு.க!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் மாவட்டம் தான். அப்படியிருந்தும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான  எஸ்டிபி கட்சிக்கு ஒதுக்கியதின் பேரில் மாநிலத்தலைவரான நெல்லை முகமதுமுபாரக் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அ.தி.மு.க.வை உருவாக்கிய தொகுதியை கூட்டணி கட்சிக்கு  முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும்  ஒதுக்கியதால் கட்சிக்காரர்களே மனம் நொந்துபோய் தேர்தல் பணியில் ஆர்வம்  காட்டாமல் இருந்து வந்தனர். 

ஆனால் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி  தற்போது தேர்தல் பணியில் ர.ர.க்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். அதை தொடர்ந்து  ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் போட்டதை  தொடர்ந்து தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியிலும் முன்னாள்  அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதனுடன் வேட்பாளர்  முகமது முபாரக் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  இந்த நிலையில் தான் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி  அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுபோல் இன்று  மாலை 4 மணியளவில் தேனி பங்களாமேடில் அ.தி.மு.க. வேட்பாளர்  நாராயணசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். 

People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

அதைத் தொடர்ந்து  திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் பிரம்மாண்டமாக போடப்பட்ட பிரச்சார  மேடையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கூட்டணி கட்சியான எஸ்டிபி  கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஆதரவு திரட்டி இரட்டை இலைக்கு ஓட்டு  கேட்க இருக்கிறார். இதற்காக மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதியில் இருந்து  ஆயிரக்கணக்கான கட்சிக்காரர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து  கொள்ள இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. மாவட்டநிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கு தேர்தல்  பிரச்சாரத்திற்கு இபிஎஸ் வருவதை தெரியப்படுத்தவில்லையாம். அதனால்  நிர்வாகிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பஸ் ஸ்டாண்ட்  அருகே உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், விஸ்வநாதனும்  அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கூட்டணி கட்சிகுள்ளேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் மாநகரின் மைய பகுதியான மாநகராட்சி  அருகே பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதற்காக மூன்று ரோடை மறித்து மிக  பிரம்மாண்டமாக மேடை நேற்று இரவிலிருந்து போடப்பட்டது. 

People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

அந்த மேடையில்  தனியாக ஒரு பகுதியில் ரெடிமேட் பாத்ரூம் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.  இதனால் அப்பகுதியில் வியாபாரிகள் தங்கள் கடைகளை சரிவர திறந்து  வைக்கவும் முடியவில்லை அதுபோல் அப்பகுதிகளில் மக்கள் நடமாட கூட  முடியாத அளவிற்கு ரோட்டை மறித்து ஸ்பீக்கர்களையும், பேரிகார்டு மற்றும்   தப்பகுச்சிகளில் மின்அலங்கார லைட்டில் தலைவர்கள் படங்களையும்  ரோடுகளில் பல பகுதிகளில் போட்டு ரோட்டை மறித்து வைத்து இருக்கிறார்கள்.  இதனால் பொதுமக்கள் டூவீலர்களிலும், நடந்தும் கூட செல்ல முடியாமல்  மாநகராட்சியை சுத்தி  செல்கிறார்கள். 

People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

ஒரு மிகப் பெரிய கட்சியின்  பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தேர்தல்  பிரச்சாரத்திற்கு திண்டுக்கல் வருகிறார் என்றால் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில்  ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் பிரச்சார மேடை அமைத்து இருக்கலாமே தவிர  நகரின் மையப் பகுதியில் போட்டு மக்களின் தினசரி வாழ்வாதாரத்தை சீரழிக்கும்  வகையில் அதிமுகவினர் பிரச்சார மேடையை போட்டு இருப்பதை கண்டு  திண்டுக்கல் மாநகர மக்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்களாம்..