சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடந்தது. அதனை தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதில்விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக நா. புகழேந்தி (66) இருந்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 66 வயதாகும் புகழேந்தி மூன்று முறை ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார்.