Skip to main content

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு வழக்கு: தனது கருத்தையும் கேட்க கோரி விஜயேந்திரர் மனு தாக்கல்!

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
vijeyendrar


தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக தனக்கு எதிரான வழக்கில் தனது கருத்தையும் கேட்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் விஜேயந்திரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த ஜனவரி 23ல் ஆளுனர் முன்னிலையில் சமுஸ்கிருத - தமிழ் அகராதி வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயேந்திரர், நிகழ்ச்சி தொடக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணை தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, சென்னை எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நிகழ்ச்சி நடந்த இடம் ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், மனுதாரரின் புகார் எஸ்பிளனேடு காவல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த மனு தொடர்பாக தனது தரப்பு வாதத்தை முன் வைக்க அனுமதிக்க வேண்டுமென விஜேந்திரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல குத்துச்சண்டை வீரர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
A famous boxer who joined the BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் இன்று (03.04.2024) தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். கடந்த 2008 ஆன் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் ஆவார். கடந்த 2019 ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு விஜயேந்தர் சிங் தோல்வி அடைந்தார். மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க.வில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்து குறித்து பேசுகையில், “நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். விஜேந்தர் சிங் நேற்று வரை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் காங்கிரஸ் க்ட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பதிவுகளை பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது