Skip to main content

ஒரு மணிநேரத்தில் அகற்றப்பட்ட விஜய்யின் எம்.ஜி.ஆர் உருவக போஸ்டர்... ரசிகர் மீது வழக்கு!!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020
 Vijay's MGR metaphor poster removed in one hour ... case against fan

 

தேனியில் நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல் சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒரு மணி நேரத்தில் கிழிக்கப்பட்டதோடு போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.



சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் திருமண நாளன்று நடிகர் விஜயையும் அவரது மனைவியையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது தேனியில் மீண்டும் எம்.ஜி.ஆர் போல் விஜய்யை உருவகப்படுத்தி சித்தரிக்கப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

 

அதில் 'ரிக்ஷாக்காரன்' படத்தில் வரும் காட்சியில் எம்.ஜி.ஆர் ரிக்ஷாவின் பின்சீட்டில் அமர்ந்திருப்பது போலவும், நடிகர் விஜய் ரிக்ஷா ஓட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. மறுபக்கம்  'எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆர் சாட்டையைப் பிடித்திருக்கும் காட்சியைப் போல் நடிகர் விஜய் சித்தரிக்கப்பட்டு, 'மாஸ்டர் வாத்தியார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த போஸ்டரில், 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் தலைமை ஏற்க விஜய் வரவேண்டும் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.


ஆனால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட பகுதி எனவும், அனுமதி கேட்காமல் போஸ்டர் ஒட்டப்பட்டதாக ஒரு மணி நேரத்திலேயே அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டதோடு, போஸ்டர் ஒட்டிய விஜய்ரசிகர் மீது  தேனி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.