தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடம் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; “விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர், திரைப்பட நடிகர் என்பதையெல்லாம் மீறி நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவரின் மனிதத் தன்மையின் காரணமாகவே, இன்று அரசியல் கட்சியையெல்லாம் தாண்டி அனைவரும் அவரின் மரணத்திற்கு வேதனையுடன் இருக்கிறோம். தன் வீட்டிற்கு தேடி வருபவர்கள் தன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், அவர்கள் சாப்பிட்டார்களா, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கவனிப்பவர். அவ்வளவு இரக்க குணம் கொண்டவர்.
இந்த நிகழ்வின் போது இருவரும் எங்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். அப்பொழுது, அவர் எனக்கு கை குலுக்கிவிட்டு, ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துவிட்டு சென்றார். இப்படியான ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் விஜயகாந்த். எனவே, அவரின் இழப்பு என்பது அரசியலுக்கும், திரைத்துறைக்கும் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று தெரிவித்தார்.